நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

வேண்டற்க வென்றிடினும் சூதினை.....

வேண்டற்க வென்றிடினும் சூதினை.....

சென்ற ஆண்டு 2014 நடைபெற்ற ஸ்ரீ ராம் சிட்ஸ் நடத்திய மாநில அளவிலான திசையெல்லாம் திருக்குறள் பேச்சு போட்டியில் கலந்து கொண்ட போது,

இதே போட்டியில் ஆறாம் வகுப்பில் முதன் முறையாக திருவாரூரில் இருந்து திருச்சி சென்று கலந்து கொண்டு முதல் சுற்றில் தோற்று பின் கல்லூரி இரண்டாமாண்டில்மாநில இறுதிப் போட்டி வரை சென்றது எனது (தாமதமான) வளர்ச்சியின் அடையாளமாக கருதுகிறேன்.

இந்தப் மாநில அளவிலான போட்டி நிகழ்ந்த அன்று (27.09.2014) தான் மாநில முதலைமைச்சர் மக்கள் முதல்வராக பதவியேற்றார். சென்னை முழுவதும் அமைதிச் சூழலே நிலவவில்லை. போட்டி நடந்து முடிந்த, இராஜா அண்ணாமலைபுரம் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரி வளாகத்திலே இரவு தங்க நேர்ந்தது. பேருந்தே கிடைக்காமல், அடுத்த நாள் (28.09.2014) ஊர் வந்து சேர்ந்தது என திகில் நிறைந்த நாட்கள் அவை.

பத்து மண்டலங்களில் முதன்மை பெற்றவர்களுக்கிடையே நடைபெற்ற இந்நிகழ்வில் பரிசு கிடைக்காமையே பெரும்பரிசாக அமைந்தது.

இந்நிகழ்வு தொடர்ந்து மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினாலும் நான் பார்க்கவில்லை. கிராமங்களில் வசிக்கும் இருவர் மட்டும் தொலைக்காட்சியில் பேசியதைப் பார்த்ததாக மகிழ்ந்தனர்.

அதைத் தாண்டி நான் பங்கு கொண்ட தொலைக்காட்சி நிகழ்வை எப்படியும் பார்க்க வேண்டும், என்ற ஆர்வத்தில் தொடர்ந்து முயற்சி செய்து வந்தேன். அந்த முயற்சிக்கு பலனாக ஒரு வருடம் கழித்து இப்போது நான் பேசிய ஒளிப்பேழை கிடைத்திருக்கிறது. நாள் பல ஆனாலும் பத்திராமாக கிடைத்திருப்பது மகிழ்வுக்குரியது.

இந்த வருடம் நடைபெற்ற போட்டியின் போது ஒளிப்பேழை கொடுத்தார் ஸ்ரீ ராம் சிட்ஸ் நிறுவனத்தின் நாகராஜன் அவர்கள். பொறுப்புணர்ச்சி மிக்க அந்த அண்ணன் திருவாரூர் வந்த போது மறவாமல் என்னிடம் கொடுத்ததை வியந்து போற்றுகிறேன்.

நன்றி

ஆசிரியர் தினமும் கோகுலாஷ்டமியும்,

ஆசிரியர் தினமும் கோகுலாஷ்டமியும்,
ஆசிரியர் தினம் : -
சுட்டி விகடனுக்கு அனுப்பிய கவிதை.
தேடினால் தருவது
கூகுள் இணையம்,
தேடாமல் தருவது
ஆசிரியர் இதயம்.
அந்த இதயத்தின்
புனிதத்தை வணங்கும் தினம்,
செப்டம்பர் ஐந்து
ஆசிரியர் தினம்.
நம்மை ஏற்றிவிட்ட
ஏணிக்களின் தினம்.
நமக்காக உழைக்கிற
தேனீக்களின் தினம்.

மாணவர்களை உருவாக்கும்
பிரம்மாக்களின் தினம்,
பிரம்மாக்களை வணங்கும்
மாணவர்களின் தினம்.

அகரம் சொல்லித்தந்து
சிகரம் ஏற்றியவர்களின் தினம்,
சிகரம் ஏறியவர்கள்
சிறந்து போற்றும் தினம்.
சமுதாயத்தை சீரமைக்கும்
சிற்பிகளின் தினம்.
உலகத்தை ‘உரு’வாக்கும்
உளிகளின் தினம்.
சிந்திக்க வைத்து,
சிரிக்க வைத்து,
பாடம் சொல்லி,
அறிவு புகட்டி,
பல்லக்கில் ஏற்றிவிடும்
ஆசிரியர்களின் தினம்
ஆசிரியர் தினம்.
வணங்குவோம் ஆசிரியர்களை,
வாழ்த்துவோம் ஆசிரியர்கள் தினத்தில் !
கோகுலாஷ்டமி : -
நான் ஒன்றாம் வகுப்பு சேர்ந்த போது, எனது தலைமை ஆசிரியராக இருந்தவர் கண்ணன்.

அவருடைய கண்ணன் எனும் பெயருக்கு கிருஷ்ணன் அவதரித்த கோகுலாஷ்டமி தினத்தில் பிறந்தவர் எனும் வரலாறு உண்டு.

05.09.2015 ஆசிரியர் தினம், கண்ணன் ஆசிரியரின் பிறந்த தினமும் தமிழ் முறைப்படி இன்று.

கோகுலாஷ்டமி தினத்தில் பிறந்ததால் வருடா வருடம் மறவாமல் பிறந்தநாள் வாழ்த்து கூறுவேன். இன்று இரட்டிப்பு மகிழ்வு. காலை தொடர்பு கொண்டு ஆசிரியர் தின வாழ்த்துகளும், பிறந்த நாள் வாழ்த்துகளும் கூறினேன். அதற்குள்ளாகவே இன்னும் அழைப்பு வரவில்லை என்று மனைவி கேட்டதாக சொன்னார்கள்.

இன்றைய தினம் எனது வயது முதிர்ந்த ஆசிரியரின் எதிர்பார்ப்பு, என்னை மேலும் இயங்க வைக்கிறது. காலை தொடர்பு கொண்டு பேசிய நொடிகள் எனக்கு பொக்கிஷமானவை - மருத்துவமனை வளாகத்தில் சிகிச்சைக்காக கண்ணன் சார் காத்திருக்கும் சமயம் அது.

ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் கண்ணன் சார்.அவரோடு சேர்த்த எனது ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும்.
த.க.தமிழ் பாரதன்

அன்றைக்கு அரசுத் துறை சார்பில்....

அரசுத் துறை சார்பில் எனது வ.சோ. ஆண்கள் பள்ளிப் பருவத்தில் பல போட்டிகளில் வென்றிருக்கிறேன்.
அதில் கூட்டுறவுத் துறை எனக்கு வானொலி வரை வாய்ப்பு தந்து ஊக்கப்படுத்தியது.

2௦௦6-211 வரை நடைபெற்ற திமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த வழக்கறிஞர் உ.மதிவாணன் அவர்களுடன் இருந்த ஒரு படம் கூட என்னால் பெற இயலவில்லை.

அந்த சமயங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள்
அமைச்சர்கள்முக்கியஸ்தர்கள்சமூக நோக்கர்கள் பலருடனும் பரிசு வாங்கிய படங்கள் பலவற்றை ஸ்டுடியோக்களில் இருந்து வாங்கியாயிற்று.

ஆனால்மதிவாணன் அவர்களுடன் பரிசு வாங்கியும் படம் எடுக்காத ஒரு குறை தற்போது நிறைவேறி இருக்கிறது. கலைஞர் நூலக அறக்கட்டளை சார்பில் ஞாயிற்றுக் கிழமை 30.08.2015 நடைபெற்ற பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்ற போது,

உடன் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன்முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் மா.சுப்ரமணியன்முன்னாள் அமைச்சர் மதிவாணன்திருவாரூர் தமிழ் சங்க செயலாளர் செல்வ துரைஅறக்கட்டளை இயக்குனர் அறிவு ஆகியோர்.

மக்கள் தொகை தின கருத்தரங்கில்....


மாவட்ட ஆட்சியரகத்தில் நடந்த
உலக மக்கள் தொகை தின கருத்தரங்க நிகழ்வில்
கலந்து கொண்டு பேசியமைக்காக.,
எளிய குடும்பம், வளமான வாழ்வு எனும் தலைப்பில், மருத்துவர்கள், மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்கள், கல்லூரி, பள்ளி மாணவர்கள்,ஆசிரியர்கள், சமூக நலத்துறையினர் மத்தியில், நடைபெற்ற கருத்தரங்கம்.
மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் மதிவாணன், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அதிகாரிகளுடன்,
த.க.தமிழ் பாரதன்

நிலாவில் உலா !

நிலாவில் உலா !
உலகத் திரைக்கான உள்ளூர் முன்னோட்டம்.
சிறு பிள்ளை முதல் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டாலும், ஒரு முழுமையான தொகுப்பாளனாக பரிணமித்தது 29.07.2015 அன்று தான். அப்துல் கலாம் அவர்களின் நினைவு தின நிகழ்வு ஒருங்கமைத்தது. ஆனால், அன்று படம் எடுக்க இயலவில்லை.
அதற்கடுத்ததாக 02.08.2015 அன்று நண்பர்கள் தினத்தை தொகுத்து வழங்கினேன்.
திருவாரூர் நிலா தொலைக்காட்சியில் தற்போது தொகுப்பாளர் பணி மேற்கொள்கிறேன். மனதிற்கு பிடித்து செய்யும் எந்த ஒரு செயலும் மக்களிடயே தாக்கத்தை ஏற்படுத்தும்.
சரியான விளம்பரதாரர் இருப்பின் இன்னும் செம்மையாக திருவாரூர் மக்களுக்கு பயனுள்ள வகையில் தொகுத்து அளிப்பதற்கு தயாராக உள்ளோம்.
தமிழ் சார்ந்து, திருவாரூர் சுற்று வட்டாரம் சார்ந்து, நகைச்சுவையாக, மாணவர்களுடன் என பல தளங்களில் மேலும் சிறப்புற இயங்க ஆயத்தப்படுத்திக் கொண்டே இருக்கிறேன். நிலா தொலைகாட்சி உரிமையாளரின் நம்பிக்கை மேலும் வலுவடைந்து கொண்டே வருகிறது.
பெரிய சாட்லைட் சேனல்களுக்கான முன்னோட்டமாக இது நிச்சயம் பயன் தருகிறது.
நிலாவில் சிந்திப்போம்.

இலக்கிய வளர்ச்சி கழகத்தில்.....

திருவாரூர் இலக்கிய வளர்ச்சிக் கழகம், கருத்தரங்கில்....
தொகுப்புரை
கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது. தமிழர்களின் வரலாறு பற்றி விரிவான தகவல்கள் இடம்பெற்றன....தொடர்ந்து பல நாட்கள் வெற்றி கரமாக நிகழ வாழ்த்துகள்.

ஆத்மார்த்த நம்பிக்கை

ஆத்மார்த்த நம்பிக்கை தான்
முயற்சியை வெற்றியாக்குகிறது...
25.08.2015

பட்டிமன்றத்தில் ஒரு பயணம்

பட்டிமன்றத்தில் ஒரு பயணம்
பல முறை பட்டிமன்றங்களில் பேசிய அனுபவம் எனக்கு உண்டு. தொலைக்காட்சி மேடைகள், வானொலி ஒலிபரப்புகள், பள்ளி விழாக்கள், கல்லூரி நிகழ்வுகள், கிராமத்து நிகழ்வுகள், நற்பணி மன்ற நிகழ்ச்சிகள் என பல இடங்களிலும் பட்டி மன்றங்களில் கலந்திருக்கிறேன்.13.௦8.2௦15 முதல் முறையாக பட்டிமன்றத்தை Professional ஆக பேச ஆரம்பித்திருக்கிறேன்.
பட்டி மன்றம் பொய் அதிகம் புழங்குகிறது, அதில் உயிர்ப்பு போய் விட்டது, அதன் பிம்பத்தை மாற்றலாம் என்று பட்டி மன்றத்தை அதிகம் சாடிய என்னிடம் அதனைப் பற்றி விளக்கி, நெடுநேரம் அறிவுரை செய்து இன்றைக்கு பட்டிமன்றத்தில் Professional ஆக பயணிக்க வைத்த நண்பர் Arun Giri அவர்களுக்கு நன்றிகள். ஜாம்பவான்களின் உலகம்
ஏனெனில், பேச்சு, உரை, சொற்பொழிவு, கருத்தரங்கம், கவியரங்கம், என பல தளங்களில் பயணித்த என் வாய்மொழி நெடுநாள் பட்டிமன்றத்தில் பயணிக்க தவறிக் கொண்டிருந்தது. பட்டிமன்றத்தில் பயணித்தாலும் என் "பழைய உரு" மாறாதவாறு பார்த்துக் கொள்ள நினைக்கிறேன்.
13.௦8.2௦15 அன்று கீழ சன்னாநல்லூர் சின்னான் சுவாமிகள் ஆலயத்தில் நடந்த பட்டி மன்றத்தில் புலவர்.மு.விவேகானந்தன் தலைமையில் அன்றும் இன்றும் பக்தியில் சிறந்தவர்கள் ஆண்களே எனும் தலைப்பில் பேசினேன். ஆலயத்தில் உற்சவம் என்பதால் கூட்டம் உட்கார்ந்து ரசித்ததை விட நகர்ந்து கொண்டே கேட்டது என்கிற காரணத்தால் எதிரே எண்ணிக்கை அதிகமில்லை. ஆயினும், பலருக்கும் சென்று சேர்ந்தது. ஆலயத்தின் உட்புறம், சாலைகளின் வழி நெடுகும் கூட்டம் இருந்தது என் மகிழ்வுக்குரியது. கடைசி வரை உண்மைக்கு புறம்பாக ஒன்று கூட சொல்லவேயில்லை. இதே கொள்கை கடைசி வரை தொடரும்.
மக்களிடம் கருத்தைச் சொல்வதற்கு ஏற்ற பல வழிகளில் இதுவும் ஒன்றாக எடுத்துக் கொண்டேன். பட்டிமன்றம் எங்கேயாவது நடந்தா சொல்லுங்க ! நானும் வர்ரேன் @ பார்க்கவும் நிறைய கத்துக்கவும் பேசவும்.

செந்நீர் தியாகங்களுக்கு கண்ணீர் மட்டுமல்ல காணிக்கை.

செந்நீர் தியாகங்களுக்கு கண்ணீர் மட்டுமல்ல காணிக்கை.
இந்த ஆண்டு சுதந்திர தினம் 15.08.2015 சிறப்பாக மனதில் பதிந்தது.
காலை கல்லூரி வளாகத்தில் பேசி முடித்த பின்பு, வீடு வந்து மதியம் உண்ட பின்பு வந்த தொலைகாட்சி நிகழ்வுகள் எல்லாம் கண்களை துடைக்க வைப்பதாகவே இருந்தது.
அதிலும், புதிய தலைமுறையின்
"எல்லை இராணுவத்தோடு" நிகழ்வு பாராட்டுக்குரியது. மறைந்து நிற்கும் இராணுவத்தினரின் உலகில் சென்று பேட்டி எடுத்த ஒவ்வொரு நொடி காணொளியும் வரலாறு.
எந்த ஒரு செயற்கையும் இல்லாமல், எந்த ஒரு பஞ்ச் வசனங்களும் இல்லாமல், இயல்பு வாழ்க்கை நிலைகளை எடுத்துரைத்து கண்களை கண்ணீர் கடலாக்கிய அந்நிகழ்வு ஊடகங்களின் மைல்கல் என்று தான் கூற வேண்டும். அவர்கள் வாழ்க்கையை சொல்லும் போது ஏன் அழுகிறோம் என்று கூடத் தெரியாமல் அழுத பொழுதுகள் அவை.
சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தினங்களில்
போராட்டக்ளங்களில் பயணிப்பதாக உணருகிறேன்.
வெறும் கண்ணீரை மட்டும் காணிக்கையாக்குவதல்ல
நம் கடமை.,
சுதந்திர வேட்கை சுணங்கிய மக்களை சூரர்களாக்கியது. மாய வேட்கையில் இருந்து விடுபடுவோம்.,
சமூகம் காப்போம்.
தேசியம் வளர்ப்போம்.
சுதந்திர தின நல்வாழ்த்துகள்...

சுதந்திர தின நல்வாழ்த்துகள் 2015.

புகலிடம் தந்த நாட்டிற்கு 
புகழிடம் சேர்ப்போம்.
சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

சனி, 15 ஆகஸ்ட், 2015

காலம் செய்த கோலம்

காலம் செய்த கோலம் 
காலத்தின் 
கோலத்தில்
கோலம் கூட
வரைபடம் ஆனது.

யார் செய்த கோலம் ....
https://www.facebook.com/photo.php?fbid=1683917158493494

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

முகநூல் வேந்தர் எனும் தமிழ் பாரதன்

எனக்கு கணினி அறிமுகப் படுத்தப்பட்டதே என்னுடைய பத்தாம் வகுப்பு அரையாண்டு தேர்வு விடுமுறையில் தான். 2௦௦4 சித்திரைத் திருநாள் தமிழ்ப் புத்தாண்டில் முதன் முதலில் கணினி வாங்க வேண்டும் என கடைக்கால் இட்டு 2௦1௦க்கு பின்னால் அது முழுமையடைந்தது. ஆனால், அதன் பயன்பாடு எனக்கு முழுவதும் தெரிவதற்கு மூன்றாண்டுகளுக்கும் மேலானது. பனிரெண்டாம் வகுப்பு முடிந்ததும் விடுமுறைக்கு சென்னையில் சித்தப்பா தங்கியிருந்தேன். அந்த நாட்களில் தான் கணினியை விட இணையம் பரிச்சயமானது.
அந்த நாட்களில் நான் கற்றுக் கொண்ட பாடம் தான் இந்நாள் வரை வேகமாக இயங்க வைக்கிறது. எனக்கு கணினி பற்றி ஓரளவுக்கு தெரிந்தாலும், இணையத்தை இரண்டு முறை 1௦ ரூபாய்க்கு அரசு நூலகத்தில் பயன்படுத்தி இருக்கிறேன். படம் பார்ப்பதற்கு கணினி என்று நிலை மாறி, இன்றைக்கு நான் எடுக்கும் குறும்படம் முழுமையும் என்னால் தொகுக்கப்பட்டு(editing) வெளியிட முடியும் எனும் அளவிற்கு பயன்படுத்த தகுதிப் படுத்திக் கொண்டேன். இணையத்தில் முதன்முதலில் எனக்கு முகநூலை தான் அறிமுகம் செய்தார்கள்.
சித்தப்பா Ravindran தான் எனக்கு மின்னஞ்சல் துவக்கி, முகநூலை துவக்கி தந்தார்கள். முகநூலின் வீச்சை அன்றைக்கு நான் உணர்ந்ததில்லை. எப்போதும் எனக்கொரு பழக்கமுண்டு. “ஒரு காரியத்தில் இறங்கும் போது, அதன் பின் விளைவுகளையும்., அதன் தொலைநோக்கு அம்சங்களையும் எடுத்து சீராய்ந்து மனதிற்கு பட்டத்தை செய்வது”. அந்த வகையில் முகநூலை ஆரம்பித்தவுடன் எனக்காக ஒன்றும் பிறருக்காக ஒன்றும் ஆரம்பித்தேன்.
நான் சிறு பிள்ளையாக இருக்கும் போது சுதந்திர தின, குடியரசு தின உரைகள் நிகழும், அதை மொழிபெயர்ப்பு செய்து வானொலியில் வெளியிடுவார்கள். “ஓஹோ! வானொலியில் பேசினால் ஒரே நேரத்தில் நாம் சொல்லும் நற்கருத்து, இந்தியா முழுவதும் பரவும்., அத்தகு செயலை செய்வதற்கு நாம் குடியரசுத் தலைவராகவோ, பிரதமராகவோ ஆக வேண்டும் என்ற எண்ணம் என்னுள் தழைத்து ஓங்கியது”. அதற்கான முன்னோட்டமாக அறிவியல் தொழில்நுட்பம் முகநூல் என் கருத்தை உலகெங்கும் அளித்து நவீனப்படுத்தியது.
குடியரசு தலைவர், பிரதமர் எனும் பதவிக்கான முன்னோட்டமாக கூட இதை கையில் எடுத்தேன். எப்போதும் செய்யும் செயல்களை வேறுபட்ட கண்ணோட்டத்துடன் அணுகும் போது, வெற்றி பெறத் துவங்குகிறோம். பேஸ்புக் கணக்கு துவங்கி ஐந்து மாத காலம், முன்னோட்டம் என்று சொல்லலாம். முதன் பதிவாக 04.08.2013ம் தேதி நண்பர்கள் தினத்தைப் பற்றி பதிவேற்றினேன். அதற்குப் பின் மனதில் பட்டதில் சிறந்தவற்றை பதிவேற்றியது உண்டு., பதிவேற்றியவுடன் நீக்கியதும் உண்டு.
நான் பதிவேற்றிய படங்கள், காணொளிகளில் எனக்கு மிகவும் பிடித்தது,https://www.facebook.com/butterbharathan1/videos/vb.100006256782775/1458293267722552/?type=3&theater மேற்கண்ட காதலர் தின காணொளி தான். எனக்கான ஒரு அடையாளத்தை தந்தது., அந்த காலத்தில் கிட்டத்தட்ட 5௦௦க்கும் மேற்பட்ட நட்பு கோரிக்கைகள் வந்திருந்தது. ஆனால், follower பற்றியெல்லாம் எனக்கு அப்போது தெரியவில்லை. அந்த காணொளி பதிவிற்கு பின்னால் தான், மேலும் நடையை மாற்ற வேண்டியதாயிற்று. அது முதல் இது வரை முகநூலில் மூன்றிக்கும் மேற்பட்ட பக்கங்களை நிர்வகித்து வருகிறேன் சிறப்பாக (!) .
லைக்குகள், கமெண்டுகள் இவற்றை வைத்து எந்த வித பணமும் சம்பாதிக்க இயலாது என்பது தெரிந்த ஒன்று. ஆனால், நான் கூறக் கூடிய செய்தி ஏதேனும் ஒரு தனிப்பட்ட நபரின் வாழ்வில் சிறு சிந்தனைத் துளியையாவது விதைத்திருக்கும் என்கிற காரணத்தால் பல மணி நேரம் என் கருத்தை சொல்வதைப் போல பிறர் கருத்தையும் அறிவதற்கு செலவிட நேர்ந்தது. பல வீடுகளில் சாற்றப்படும் கூற்றுகளைப் போன்ற திட்டுகளும் என்னை வந்து சேரும். மாதம் 7௦௦ ரூபாய்க்கும் மேலாக இணையத்திற்காக பணம் கட்டும் போது தான் தேவையில்லாமல் செலவு செய்கிறோமோ? எனும் எண்ணம் வரும். ஆனால், அவற்றிற்கெல்லாம் விடையாக “நான் சரியாகத் தான் பயன்படுத்தி இருக்கிறேன் என்பதை எனக்கு உணர்த்தி இருக்கிறது, (Facebook King Award) முகநூல் வேந்தர் விருது”.
சமூகத்தின் நான் யார் என்பதற்கான அடையாளத்தை முகம் தெரியாத நண்பர்களுக்கு அளித்தது இந்த முகநூல். அதே போல் வெவ்வேறு தளங்களில் பயணித்தவர்களை இணைக்கும் பாலமாக இருப்பதும் இதுவே. உலகின் முதன் முயற்சியாக தமிழகம் முழுவதிலும் இருக்கக் கூடிய முகநூல் பயன்பாட்டாளர்களை ஆய்வு செய்து தேர்ந்தெடுத்திருக்கிற காஞ்சி முத்தமிழ்சங்கம்த்திற்கு பாராட்டுகள்.
நான் திருவாரூர் பகுதி மற்றும் தமிழகத்தின் பல போராளிகள் முகநூல் மூலம் விழிப்புணர்வு மேற்கொள்கிறார்கள் என்பதையே முதலில் தெரிவித்தேன். இனி வரும் ஆண்டுகளில் இது போன்ற ஒவ்வொரு ஆண்டும் விழா நடத்தப்படும் என்று கூறிய சூ.லாரன்ஸ் பொதுக் செயலாளர், காஞ்சி முத்தமிழ் சங்கம் அவர்களுக்கு நன்றி. விகடனில் மாணவ பத்திரிக்கையாளர் பயிற்சி திட்டத்தில் இருந்ததால் சாலச்சிறந்ததாக கடந்த ஓராண்டாக எப்பதிவும் நான் செய்யவில்லை என்கிற மனத் தோற்றம் எனக்குண்டு. இருந்தாலும் அவ்வப்போது தலைகாட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தேன்.
26.௦7.2௦15 அன்று முகநூல் வேந்தர் விருதை பெறும் நாள். விகடன் மாணவ பத்திரிக்கையாளர் பயிற்சி திட்டத்தில் நிறைவு விழா முடிந்து மதியம் வேக வேகமாக தி.நகரில் இருந்து தாம்பரம் வந்து அங்கிருந்து காஞ்சிபுரம் நின்றே பயணித்து, காஞ்சிபுரத்தில் இருந்து திரும்புகையில் திண்டிவனம் வரை உட்கார இடம் கிடைக்காமல் வழக்கத்தை விட மாறுபட்ட நாளாக அமைந்தது.
எதிர்கால இலக்குகளுக்கும் எனது இயல்பான வாழ்க்கைக்கும் இடையேயான பயணத்தை கடந்து செல்லும் இந்தப் பாதையில் கிடைத்திருக்கும் முகநூல் வேந்தர் விருதினை Ravindran Kalyanasundaramஅவர்களுக்கு சமர்பிக்கிறேன்.
படத்தில் கு.ஞானசம்பந்தன் அவர்களுடன்
த.க.தமிழ் பாரதன்

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

உலகின் எதையும் மாற்றும் வல்லமை பெற்றவர்கள்...,

உலகின் எதையும் மாற்றும் வல்லமை பெற்றவர்கள்...,

https://www.facebook.com/photo.php?fbid=1680182885533588&set=a.1382304238654789.1073741827.100006256782775&type=1&theater
உலகின் எதையும் மாற்றும் வல்லமை பெற்றவர்கள்...,
போராட்டக்காரர்கள்,
மாணவர்கள்,
பத்திரிக்கையாளர்கள்,
எளிமையானவர்கள்,
இந்த நான்கு வல்லமை பெற்றவர்களில் எல்லாமாகவும் நாங்கள் இருந்திருக்கிறோம், இனி இருக்கவும் போகிறோம்., இளைமைக்கு உரிய துடிப்பு, நேரம் நோக்கி அறியும் நுட்பம், முழு ஈடுபாடு என பல்வேறு செயல்களில் முழுமையான வெற்றி எங்களுக்கு கிடைத்திருக்கிறது.
விகடன் மாணவ பத்திரிக்கையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் ஒரு வருடம் மிகவும் வேகமான ஓட்டம், எங்களுக்கும் காலத்திற்கும். சீரான இடைவெளியில் பலரும் தங்களின் திறன்களை வெளிப்படுத்தி இருக்கிறோம். அதற்கான பலன்களை பல வகையில் அடைந்திருக்கிறோம்.
பயணம் துவங்கிய இடத்தில் பலர் இருந்தனர். பயணம் முடிவதற்குள் பலர் பிரிந்தனர். இறுதி நாள் வரை இருந்தவர்கள் நாங்கள். அனைவருக்குள்ளும் ஏதேனும் ஒரு திறன் இருக்கிறது. தன் வாழ்க்கைப் பயணத்தோடு கூடிய மற்றொரு பயணத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் தகுதி ஒரு சிலருக்கு தான் வாய்க்கப்பெற்றிருக்கிறது. அந்த வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அதை கொண்டு திறனை மேம்படுத்தியிருக்கிறோம்.
பத்திரிக்கையாளர் பயிற்சி முடிந்த பின்பு நாங்கள் பெற்ற மகிழ்ச்சி செய்த வேலைக்கான பரிசு. அதைத்தாண்டி இங்கு கிடைத்த நண்பர்கள் தான் அதிசயமூட்டும் பரிசு. பலவகைகளில் தங்களை மேம்படுத்தி இந்நாட்டிற்கும் வீட்டிற்கும் அடையாளம் தர காத்திருப்பவர்கள். இந்த ஒவ்வொருவரும் தனித்திறன் மிக்கவர்களாகவே உரு பெற்றிருக்கிறார்கள்.
உடனடி கவிதை, ஒரு வரி நகைச்சுவை, விசாலமான பார்வை, எடுத்துரைக்கும் எழுத்து நடை, அபாயகராமான உழைப்பு, சலிக்காத ஓட்டம், என பலருக்கும் பல முகம். நாங்கள் ஒவ்வொருவரும் வருங்காலத்தில் வெவ்வேறு இடங்களில் பணியமர்த்தப்படலாம். ஆனால், அன்றைக்கும் இன்று போல், என்றும் சிரித்த முகத்தோடு, விரிந்த பார்வையோடு, தெளிந்த நோக்கோடு செயல்படல் அவசியம். நமது செயல்களால், நம்மைப் போன்றவர்களின் செயல்களால், நாடு மேன்மை அடைவதை யாராலும் தடுக்க இயலாது.
நமது வாழ்க்கையில் சந்திர மண்டலத்தை தாண்டிய தூரம் காத்துக் கொண்டிருக்கிறது. வெவ்வேறு தளங்களில், வெவ்வேறு இலக்குகளில், வெவ்வேறு பார்வையோடு சென்ற நாம் ஒன்றிணைத்த ஓரிடம் விகடன். இனி ஒரு கணம் எல்லாரும் ஒரே நேரத்தில் சந்திப்பது சாத்தியமாகுமா ? என தெரியாத வேலையில் உங்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் நண்பர்களே .
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்....
த.க.தமிழ் பாரதன்
02.08.2015

இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள் நண்பர்களே....

இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள் நண்பர்களே....

https://www.facebook.com/photo.php?fbid=1680138852204658&set=a.1388013374750542.1073741829.100006256782775&type=1&theater

எந்நாளும் மறக்க முடியாததாக 
என்னாலும் மறக்க முடியாததாக
விளங்கக் கூடியதுமான
பள்ளிப் பருவத்து நட்புகள்

நோக்கத்தின் திசையறிந்து
ஊக்கத்தினை தரும் முதலிடம் நட்புகளுக்கே.

வ.சோ.ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2௦11 முதல் 2௦13 வரை
தமிழ் வழியில் மேல்நிலைப் பிரிவு கணிதம்-உயிரியல் படித்த மாணவர்கள்.

பொறியாளர்களாகவும், தொழில் நுட்பவல்லுனர்களாகவும், சமூக அக்கறை உள்ளவர்களாகவும், அதிகாரிகளாகவும், சமூகத்தில் கடை நிலை ஊழியனாகவும், அடிப்படை பணியாளர்களாகவும், அரசியல்வாதிகளாகவும் தன்னை மெருகேற்றிக் கொண்டிருக்கின்றனர் தற்போது.....

இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள் நண்பர்களே....


வெள்ளி, 31 ஜூலை, 2015

உயிர் பிரிந்த கலாமின் உணர்வுகளை மெய்பிப்போம்.

உயிர் பிரிந்த கலாமின் உணர்வுகளை மெய்பிப்போம்.

எல்லாரின் பிறப்புகளையும் இறப்புக்குள் அடக்கி விட முடியாது என்ற முன்னோடி கருத்துக்கு அப்துல் கலாமே சான்று. நான் முன்னெடுத்த ஆட்சி, அதிகாரம், பணம், புகழ், செல்வாக்கு, பெருமை, அரசியல் என்ற கோட்பாடுகளில் பலவற்றை தன்னிறைவோடு பெற்ற ஓரே நபர். அதைத் தாண்டி சிலவற்றையும் எனக்கு கற்பிதங்களாக தந்தவர் அப்துல் கலாம் மட்டுமே.

காலத்தின் கட்டாயத்தில் மறைந்திருக்கின்றார் என்றால், கலாமின் கட்டாயத்தில் பல கோடி பேர் நன்மக்களாக உருவாகி இருக்கின்றனர் என்பது மெய். நான் உலகை உணர ஆரம்பித்த நொடியில் எனக்கு அறிமுகப் படுத்தப் பட்ட அணு ஆயுதம், அறிவாயுதம், அப்துல் கலாம். காந்தி, கக்கன், காமராஜர் என நம் முன்னோடி முன்னோர்கள் வாழ்ந்த இறந்தகாலத்தில் வாழ முடியாத சூழலில், நம் நிகழ்காலத்தில் வாழ்ந்த முன்னோடி அப்துல் கலாம்.

இவரைப் போல இவன் உருவாக வேண்டும் என்றே ஆசிரியர்களும், அன்னை தந்தையும் ஆசைப்பட்டனர். ஆனால், நான் நானாகவே பிரசவிக்கப்படேன், நானாகவே தான் உருவானேன். ஆனால், பலரின் தாக்கங்கள் என்னுள் விதைத்துக்கொண்டேன். அந்தத் தாக்கத்தில் இறுதி வரை “இவர் தான் அப்துல் கலாம்” எனும் என்னுடைய வரையறைக்குள் வராது நின்றவர் தான் கலாம்.

தன்னுடைய வாழ்நாளில் எல்லாருக்காகவும் ஓடி உழைத்த பெருமை,
அதன் பலனை இந்தியாவுக்கு கொடுத்த பெருமை
திருமகன் அப்துல் கலாமையே சாரும்.

என்னுடைய வாழ்நாளில் நான் எப்படியும் அப்துல் கலாமோடு நின்று படம் எடுத்துக் கொள்வேன் என்று நினைத்திருந்தேன். ஆனால், அதற்கு கலாமின் வாழ்நாள் ஒத்துழைக்க வில்லை. இருப்பினும் அவரை நேரில் பார்க்கும் பேறு கிடைத்தது கவிஞர் வைரமுத்துவினால் தான். கவிஞரின் மணி விழா நிகழ்விற்கு பரிசு வாங்க சென்ற போது அப்துல் கலாமின் உரையையும் அவரது திருஉருவத்தையும் காண முடிந்தது. அந்தக் கணங்கள் தான் நீங்கள் இங்கு பார்க்கும் படங்கள்.

அவர் கூறிய எத்தனையோ குறிக்கோள்கள் நிறைவேறியும், நிறைவேற காத்துக் கொண்டும் இருக்கின்றன. அவரை மதித்த மக்கள் அவருக்காக செய்ய வேண்டிய செயல்கள் எவ்வளவோ இருக்கின்றன. ஆனால், அது குறித்து பேசவே மறுக்கும் மக்களால் எப்படி செயல்படுத்த முடியும். நேற்று (29.௦7.2௦15) உள்ளூர் தொலைக்காட்சியில் கருத்துப் பரிமாற்றம் நிகழ்வில் கலந்து கொண்டேன். ஒரு மணி நேரத்தில் அப்துல்கலாம் பற்றிய கருத்துகளை பகிர்வதற்கு இரண்டு பேர் தான் முன்வந்தனர். ஒரு மணி நேர நிகழ்வில் 2 மட்டுமே பேசுதல் என்பது சாதாரண நடிகன், நீங்கள் கேட்டவை, பிறந்தநாள் வாழ்த்து போன்றவற்றில் நிகழாது ஒன்று.

இது ஒரு உதாரணம். இவை போன்ற குறைபாடுகள் எண்ணற்ற அளவில் பாடுபொருளாக இருக்கின்ற இந்தியாவை தான் 2௦2௦ல் வல்லரசாக்க விரும்பினார் கலாம். அந்த எண்ணத்தை ஈடேற்ற “ ஒவ்வொரு உண்மை இளைஞன் பலருக்கு இணையாக பாடுபட வேண்டி இருக்கும்”.

இவையெல்லாம் “நிச்சயம் ஒரு நாள் விடியும்., அது நம்மால் மட்டுமே முடியும்”, என்கின்ற எண்ணத்தில் களத்தில் இறங்கத் தயாராகி விட்டோம். எதைப் பாடுபொருளாகக் கொண்டு என்னை சீர்படுத்துவது என்றிருந்தேன். அந்த முயற்சிக்கு ஒரு உடனடி பாதையை தற்போதைய சூழ்நிலைகள் உருவாக்கி இருக்கின்றன. உருவாக வைத்திருக்கின்றன.

அவரைப் பற்றி பேசுவது மட்டுமல்ல, அவர் விட்டுச் சென்ற செயல்களுக்கு உயிர் வடிவம் கொடுப்பதும் நமக்கு கடைமையாக இருக்கிறது. அவரது கனவோடு சேர்த்து நமது கனவும் மெய்ப்படட்டும்.

சராசரியும் சாதனை ஆகின்றது, அதன் சரித்திரப் பின்னணியில்.....

த.க.தமிழ் பாரதன்

வார்த்தெடுக்க வந்த கேசி



வார்த்தெடுக்க வந்த கேசி. 



திருவாரூர் பகுதியில் மாணவர்கள் மத்தியில் பிரபலாமன பெயர் கே.சந்திரசேகரன். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அறிவியல் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தவர். இதனால் பரவாலாக அறிவொளி சந்திரசேகர் என அறியப்பட்டிருந்தார். எங்களால் சுருக்கமாக கேசி சார் என்று அழைக்கப்பட்டிருந்தார்அப்துல் கலாம் தன் கடைசி மூச்சு வரை எப்படி மாணவர்களுக்காக உழைத்தாரோ அதுபோல தன்னுடைய இறுதி நாள் வரை மாணவர்களுக்கு கல்வி போதித்து மாரடைப்பால் மறைந்திருகிறார்.

பல்வேறு சமூக தன்னார்வ அமைப்புகளிலும் இருந்த கே.சி குறிப்பாக கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அறிவியல் இயக்கத்தின் முன்னணி தலைவராக வாழ்ந்திருக்கிறார். இவர் அன்றாடம் VAO பணி முடிந்த நேரம் போக மிச்ச நேரத்தில் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஊட்டியிந்ததை நானறிவேன். ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கான வினாடிவினா நிகழ்ச்சி நடத்தி காட்டியவர். இவரிடம் பரிசு வாங்குவதற்காக சிறு பிள்ளை காலத்தில் நிறைய அறிந்து கொண்டிருக்கிறேன். சில வினாடி வினாக்களில் தோற்றதால் என்னுடைய பள்ளிப் படிப்பின் கடைசி நான்காண்டுகள் தொடர்ந்து மாநிலப் போட்டி வரை முன்னேறிய பெருமை முழுமையும் கேசியின் ஈடுபாட்டிற்கே சென்று சேரும்.

எளிய அறிவியல் பரிசோதனை பல்லாயிரம் மாணவர்களுக்கு நிகழ்த்தியவர், தொழில்நுட்பம் என்னா தான் வளர்ந்தாலும் இன்னும் அவரது அறிவியல் பரிசோதனைகள் கிராமத்து மாணவர்களுக்கு அதிசயங்களாகவே திகழ்கின்றன. வருடத்திற்கு பல்லாயிரம் மாணவர்களுக்கும் அதிகமாக அறிவியல் திறன் பயிற்சி அளித்து வந்திருக்கிறார். குழந்தைகள் பலர் அவரை செல்லமாக தாத்தா என்றே அழைக்கும் (சில நேரங்களில் நாங்களும் கூட). அந்தளவுக்கு அவருக்கும் குழந்தைகளை பிடிக்கும்.

திருவாரூர் பகுதியில் அரசு தேர்வுக்கு பல மாணவர்களை உருவாக்கிய பெருமை இவரையே சாரும். இதற்காக எந்த பயிற்சி கட்டணமும் இவர் வாங்க வில்லை என்பதற்கு இவரிடம் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையே சாட்சி. இந்த இலவச பயிற்சி மூலம் இது வரை 9௦க்கும் மேற்பட்டவர்களை அரசுப் பணிக்கு அனுப்பி இருக்கிறார். இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த கிராமங்கலிருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயனடைந்தனர்.

கடைசியாக நடைபெற்ற SI தேர்வில் கூட இவரிடம் பயின்ற பரணிஎன்ற பெண்மணி தேர்வாகி இருக்கிறார். அறிவு சார்ந்த புத்தகங்களை தன் பையில் சுமந்து கொண்டே தான் செல்லும் இடங்களில் எல்லாம் புத்தகங்களை தரக்கூடிய பண்புடையவர். தன்னுடைய VAOபணியில் இருந்து ஓய்வு பெற்ற பின் இன்னும் அவர் சுறுசுறுப்பானார்.

சென்னையில் உள்ள மகன் வீட்டில் எல்லாரும் குடியேற சென்னை வாழ்க்கை தன் ஆரோக்கிய பயணத்தை தடை செய்வதை உணர்ந்து முழு நேரமாக மாணவர்களை உருவாக்கினார். திங்கள் முதல் வெள்ளி வரை சென்னை வாசமும், சனி ஞாயிறில் திருவாருரும் அவருக்கு இடம் கொடுத்தது. இது இல்லாமல் அறிவியல் பிரச்சாரத்திற்கு அவ்வப்போது தமிழகத்தின் பல பகுதிகளுக்கு செல்வதும் பழக்கம்.

கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற குருப் 2 தேர்வுக்காக மாணவர்களை தயார் செய்ய திருவாரூர் வந்தவர், முடிந்த உடனே ஞாயிறு சென்னை செல்ல வேண்டியவர். செல்லாமல், மாணவர்களை வீட்டிற்கே வரச் சொல்லி ஒரு வார காலம் பயிற்சி கொடுக்க நினைத்திருக்கிறார். அவர்களுக்கு தன் கையாலே உணவு சமைத்து பரிமாறியிருக்கிறார் கேசி. காலை வகுப்பின் போது அப்துல் கலாம் பற்றிய முழு தகவலையும் அளித்தவர் , இன்னும் பத்தாண்டு காலம் இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும் என்று சொன்னவர் இப்பொது இல்லையே என்று வருத்தப்படுகிறார் சிவா அண்ணன். குருப் 1 தேர்வுக்காக பயிற்சி பெறும் மாணவரான இவர் காலை பயிற்சி முடித்து தன்னுடைய வீட்டிற்குள் நுழையும் போது நான் கேசி இறந்த செய்தியை நான் எப்படி நம்ப முடியாமல் தவித்தேனோ அப்படியே தவித்திருந்தார் என்பது எனக்குத் தெரியும்.

இனி திருவாரூரில் இது போல் ஒரு பயிற்சி வகுப்பு நடத்தப் போவதுமில்லை, நடத்துவதற்கு இவரைப் போன்ற ஆளும் இல்லை என்பது சிவா அண்ணனின் தனிப் பட்ட கருத்து என்றாலும் கூட. இது போல் நடத்தினாலும் இவர் போல் பழக ஆளில்லை என்பது மெய். அரசுத் துறை நிகழ்ச்சி பலவற்றில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து இவருக்கு தான் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக அழைப்பு வரும்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் கேசி தான் திருவாரூர் மாவட்ட செயலாளர். அந்தப் பதவி மீது அவருக்கு ஏகப்பட்ட விருப்பம். யாருக்காகவும் அதை தர மாட்டார். இந்த வருடத்தில் அடுத்தவருக்கு வாய்ப்பு தர முடிவுகள் எடுக்கப்படலாம் என பேச்சுகள் அடிபட்டன. எது நடந்தாலும் தன்னுடைய எண்ணத்தில் நிலைத்து நின்றார். அவனுங்க கடக்குரானுங்க., எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக்குறேன்என்று சொன்னவர், கடைசி வரை தான் இருந்த அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் பதவியோடே ஓய்வு பெற்றிருப்பதும் ஒரு ஆளுமையே. நான் திருவாரூர் ஒன்றிய செயலாளராக இருக்கட்டுமா? என்று கேட்க, இரு ! நான் உனக்கு நிறைய சொல்றேன். அவனுங்க மாதிரி இருக்காதே. அறிவியலை ஆராய்ந்து முதலில் கற்றுக் கொள். நீ முதலில் முழுமையானால் தான் மற்றவருக்கு அறிவுறுத்த தகுதியானவன் ஆவாய், என்றார். தற்போது நான் ஒன்றிய செயலாளர், மாவட்ட செயலாளர் கேசி எங்கே ?

ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு செய்தித் தாள்களை படித்து அவற்றின் முக்கிய குறிப்புகளை சேகரித்து பைண்டிங் செய்து வைத்திருக்கும் இவர் இதுவரை சேகரித்த புத்தகங்கள் பல்லாயிரத்திற்கும் அதிகமாக இருக்கும் என்பது என் நம்பிக்கை.
தான் இறந்தாலும் தானம் செய்ய வேண்டி கண் தானம் செய்திருக்கிறார். சென்னையில் இருந்து உறவினர்கள் வருவதற்குள் திருவாரூர் சமூக ஆர்வலர்கள் கேசி-யின் இல்லத்தை சூழ்ந்தனர் என்பது அவரது ஓட்டத்திற்கு கிடைத்த ஊதியம்.

இவருக்கு நான் முன்பதிவு செய்த ரயில் பயணச்சீட்டுகள் அதிகம், அதை விட ரத்து செய்த சீட்டுகள் அதிகம். ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறை, சில நாட்களில் அதற்கும் அதிகமுறை அலைபேசி அழைத்து பேசிவிடுவார். எதற்காக செய்தார் ? நான் நினைத்துக் கொள்வேன் யாரிடமாவது பேசினால் ஏதேனும் மானுட தைரியம் வரும் என்று., ஆனால் இனிமேல் யார் அழைப்பார்கள் தன்னைப் பற்றி என்னைப் பற்றி விவரிக்க. இவரது பயிற்சி மையத்திற்கு ஆள் சேர்க்கும் பொறுப்பு என்னிடம் தந்தார். எல்லா கல்லூரிகளிலும், என் கல்லூரி வகுப்புகள் பலவற்றிலும், அரசு வேலை தேடி செல்பவர்களிடத்திலும் நான் அறிமுகப்படுத்தியதுண்டு கேசி முகவரியை. தானே இல்லை என்றாலும் தன் வீட்டில் வகுப்பு நடக்கும் அளவிற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டு பயணம் சென்றிருக்கிறார். அந்த பயணங்கள் முடிந்து திரும்பி வந்தவர், தன் பயணத்தை நீண்ட நெடியதாக மாற்றி இருக்கிறார்.

சிறுவயதில் போலியோ சொட்டு மருந்து பெற்ற நான், ஒரு குழந்தைக்காவது போலியோ மருந்து இட வேண்டும் என நினைத்த எண்ணத்தை மெய்ப்படாக்கி காட்டியவர் கேசி மட்டுமே. அதற்காக என்னை அரை மணி நேரம் தயார் செய்தார், தயாரானேன். அந்தப் படம் தான் நானும் அவரும் ஒருங்கே இருந்து என்னிடம் இருக்கும் ஒரே படம்.

பத்திரிக்கையாளர் ஆன பின் நான் பகலில் தூங்கியே பல மாதங்கள் சென்றிருக்கின்றன. 12.7.215 அன்று ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக கேசி வீட்டில் நடந்த பயிற்சி வகுப்பில் ஊஞ்சலில் உட்கார்ந்தே தூங்கியது தான் நினைவுக்கு வருகின்றன. இதுவரை நான் கூறிய அலட்சிய பதில்களை அலட்சியம் செய்த ஒரே நபர் கேசி இவர் மட்டுமே. இதனை எல்லாம் உடனே பதிவேற்ற நேரம் சரிவர வில்லை. இதற்கு முன்னர் மறைந்த அப்துல் கலாம்க்கு இன்னும் நான் பதிவுகள் செய்யவில்லை முகநூலில். என்னுடன் வினாடி வினாவுக்கு சென்ற அண்ணன் சுதர்சனின் வேண்டுகோளினாலும் என்னுடைய நீண்ட நீங்காத நினைவுகளாலும் இதனை தற்போது உங்கள் மத்தியில் வைத்திருக்கின்றேன்.

கேசி போல் எத்தனை பேர் எல்லா இடங்களிலும் சாத்தியம் ?

பலன் எதுவென்று அறியாது பதவி முடிகிறது,
அந்தப் பலன் வெகு நாளைக்குப் பின்,
உணர்வுகளால் பெறப்படுகின்றது.
உயிர் பிறந்த பின்னரும்..... 

த.க.தமிழ் பாரதன்

செவ்வாய், 28 ஜூலை, 2015

இராஷ்ட்ரபதி பவனை தமிழன் ஆண்ட வரலாறு

இராஷ்ட்ரபதி பவனை தமிழன் ஆண்ட வரலாறு
இன்னொரு அப்துல்கலாமை
தமிழகத்தின் எந்த ஒரு 
ஆங்கிலப் வழி பள்ளியாலும்
உருவாக்கி விட முடியாது.

இராமேஸ்வரத்தில் பிறந்த படகோட்டி மகன்,
இராஷ்ட்ரபதி பவனை ஆண்ட வரலாறு

சராசரி என்று யாருமில்லை.

சராசரி என்று யாருமில்லை.....
நாம் சராசரி அல்ல, 
என்பதை சரமாரியாக 
மாறும் போது உணர்கிறோம்.

வாழ்விக்க வந்த வள்ளலார்

வாழ்விக்க வந்த வள்ளலார்
12.07.2015 நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த நெம்மேலி வள்ளலார் தெருவில் அமைத்திருக்கக் கூடிய சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தின் ஏழாம் ஆண்டு விழாவினை முன்னிட்டு வாழ்விக்க வந்த வள்ளலார் எனும் தலைப்பில் அமைந்த சொற்பொழிவு உரை

நீ சிந்துகிற ஒவ்வொரு சாதத்திலும் எழுதப்பட்ட உன் பெயரை அழித்துக் கொள்கிறாய்....

உன் பெயரை அழித்துக் கொள்கிறாய்....

விவசாயத்தை குழந்தைகளுக்கு விதையுங்கள்..
இல்லை சிந்தாமல் உண்ணவாவது சொல்லித் தாருங்கள் பெற்றோர்களே...

புதன், 6 மே, 2015

கடவுளே காம்ப்ரமைஸ் ஆகும் போது,

கடவுளே காம்ப்ரமைஸ் ஆகும் போது,
ஸ்ரீ கண்ணாயிர மூர்த்தி ஐயனார் துணையுடன் 
இயேசுகிறிஸ்து நடைபயணம்., 

கடவுளே காம்ப்ரமைஸ் ஆகும் போது,
கடவுளை வணங்கும் மனிதன் (?) மட்டும்.........

திருவாரூரில் மே ௦2 இரவு நடைபெற்ற மாபெரும் நடைபயண பேரணியில் கண்ணிமைக்கும் நேரத்தில் கணித்து எடுத்தது.

த.க.தமிழ் பாரதன்

வெள்ளி, 3 ஏப்ரல், 2015

வானத்தில் எழுதிய முதலெழுத்து ....



"வானத்தில் எழுதிய முதலெழுத்து" 

சாதாரண வாகனமாக
சரியாய் திரும்பி,
திடீரென கிளம்பி,
காதில் அடைத்து,

காற்றில் தவழ்ந்து,
வானில் மிதந்து,
வையத்தை விட்டு
பிரிகிற வேலையில்,
மனமெல்லாம் மகிழ்ச்சியில்லை.

இதுவரை ஏதோ
ஒரு வகையில் கால்கள் -
பூமியில் ஊன்றியே இருந்தது.

முதல் முறை
பாதத்திற்கும் பூமிப்பந்திற்கும்
தொடர்பு அறுகிறது.

மெல்ல மெல்ல
மெல்ல மெல்ல
30, 45 கோணம் சுழல
காதுகளில் காற்றடைப்பு
நிகழ்கிறது.

இருட்டடிப்பு செய்யப்பட்ட
என் போன்றவர்களின்
விமான ஆசையில்,
முதல் முறை
பிரவேசித்த போது
ஒரு துளி கூட
உணர்வில்லை.

நம்மூர் டவுன் பஸ்,
எக்ஸ்பிரஸ் டிரெயின் -
போன்றவைகளைப் போல
உதறல் மட்டுமில்லை.

மற்றபடி ஆங்காங்கே,
விற்கும் சம்சா - பீட்சா ஆனது.
காபி - கேபசினோ ஆனது.

ஆயிரம் விதி விதித்தும்
அழகு கண்களை
பணிப்பெண்களாக
அனுப்பி

பணம் பறித்தார்கள்,.

இளித்த முகத்துக்காக
இளைக்காத பலரும்
சலிக்காமல்
வேண்டாமென்றனர்.

அந்த வகையில்
நானும் ஒருவன்.
ஒரு வகையில்
அதுவும் சேமிப்பு.

தண்ணி மட்டும் இனாம்.
அதுவும் மினரல் தண்ணீர்
மட்டும் என்பதால்.

தண்ணி என்பதில்
பலரும் ஏமாறவில்லை.
ஏனெனில்,  

சென்றவர்களில் பலரும்
தமிழ்க் குடிமகனில்லை.
தோராயமாக 30,000 அடி
என வந்த அறிவிப்பில்
அடி வயிறு கலங்கவில்லை.


எனில், நான் ஏற்கனவே
சனிபெயர்ச்சி
அன்று சனிக்கு 
சென்று வந்திருக்கிறேன்
என்ற திமிர்.

கனவிலே, காதலிலே
நிலவில் கால் பதிக்கும்
எனக்கும் - இது
பழக்கப்பட்ட
சைக்கிள் பயணமாகவே
தென்பட்டது.


எப்போதும் போல்
ஒரு மணி நேரத்தில்
பயணிகள் ஓய்ந்து விட
என் ஆட்டம் ஆரம்பித்தது.

Flight Mode இல்லாத என் பேசியில்
Switch Off செய்ய முடியாத
என் மனநிலையில்
முகநூலும் முகம் காட்டவில்லை
காரணம் பேசியில் டவரில்லை.

வேண்டாம் என நினைத்தாலும்,
சரி என, 
ஆதிப் பயன்பாடு
ஆரம்பமானது.

வந்தது தூக்கமில்ல்லை.
எப்போதும் போல் காதில்,
ஏர்போன் மாட்டி
“மாங்குயிலே பூங்குயிலே”
கேட்கையில்தான்
மனசுக்குள் மகிழ்வு.

* மாங்குயிலே  

*மலர்ந்தும் மலராது
*மூன்றாம் பிறை
அணிவகுத்த
வகுத்த பாடலால்
கண்ணயர்ந்தன.

விமான சேவை
பலருக்கு Call Taxi
போன்றது.

சிலருக்கு அமரர் ஊர்தி
போன்றது.

சிறிது நேரம் கழிந்தவுடன்,
வேடிக்கை பார்க்க
விடுத்த விண்ணப்பம்
மேல் முறையீடு இன்றி
ஒப்புதல் ஆனதால்,
சன்னல் இருக்கை
சாய்வில் இடம் கிடைத்தது.

அநேகமாய் நாக்பூர் இருக்கும்,
மேகக் கூட்டமெல்லாம்
மின்மினிப் பூச்சாய்
ஒளிர்ந்தனைய,
ஒற்றை பாம்பாய் ஓங்கி நீள்கிறது
ஏதோ ஒரு நதி.

மீதி சிறிது ஓய்வுக்குப் பின்,

.
.
.


கூகிள் சர்ச்சில் காணப்படும்
நில வரைபடம்
நிஜமானதென்பதையும்
காண முடிந்தது.


யாருக்கும் தெரியாமல்
நானடித்த கண்ணிற்கு
வெயிலில் வெள்ளை கண்சிமிட்டி
அடித்தது ரேடார்.


வழக்கம் போல் வண்டிகளில்
சாய்ந்து வேடிக்கை பார்க்கையில்,


”வலைந்த கண்ணாடி

உடைந்து போய்
காற்று உள் நுழைந்து
காற்றழுத்தம் கருவாகி,
நிழற்கதவை துளைத்து,
காதினைக் கண்ணாடியை
விட்டுக் எடுக்கச் செய்தது
வந்த கனவு”.

ரயில் எஞ்சின் சப்தம் போய்
தொடர் சப்தத்தில்
முழு ஒலியில்
பேசியின் பாடலும்
பாழடைந்து சீரடைந்தது.

மேகம் மீது கை வைத்த வானம் !
அண்ணாந்து பார்க்கையில்
அழகாய் இருந்தது.

நானெப்போது இப்படியாவது ?

தில்லி வந்து முடிப்பதற்குள்
முதற் பாகம் முடித்து விட்டேன்.

கண் அயர்ந்து
மறுபடி எழுதுகிறேன்,



வான்வெளியில் தில்லிக்கு முதன் முதலாய் பயணித்த போது எழுதியவை

02.04.2015
த.க.தமிழ் பாரதன்