நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

சனி, 28 அக்டோபர், 2017

சீயான் விக்ரமிற்கு ஒரு கடிதம்

சீயான் விக்ரமிற்கு ஒரு கடிதம்

வணக்கம் சீயான்,
 
 
ஒரு உண்மை நடிகருக்குஉண்மை ரசிகனின் மடல்.  நலம் நலமறிய ஆவல்.  இந்த கடிதத்தை எனக்கு எழுத வாய்ப்பு தந்தது நீங்கள்உத்வேகம் தந்தது நீங்கள். எழுதுமளவிற்கு என்னை தகுதிக்கு உட்படுத்தியதும் தாங்கள் எனக்குள் விதைத்த வசனங்கள்.  எனக்குள் இருந்த  இரசிப்புத் தன்மையை வெளியே வெளிக்கொணர்ந்தது விக்ரம் எனும் தனிமனிதனின் திரைப்படங்களே.
 
பள்ளிப் பருவத்திலேயே கராத்தே, குதிரையேற்றம், நீச்சல் விளையாட்டுகளையும் கற்றுத் தேர்ந்தவர். திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வமிருந்தும் தனது தந்தையின் கட்டாயத்தால் முதுகலை வணிக மேலாண்மை படிப்பை லயோலா கல்லூரியில் படித்து முடித்தவர். கல்லூரியில் படிக்கும்போது ஒரு வாகன விபத்தில் படுகாயமடைந்து மூன்று வருடம் மருத்துவமனையிலிருந்த விக்ரம் தன் கால் செயலிழக்காமலிருக்க இருபத்து மூன்று அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டவர்.
 
நான் பார்த்த விக்ரம் பொறுத்தவரை,  ஓவர்நைட் ஸ்டார் அல்ல அவர். நாயகனாக அவரது துவக்கம் ஆஹா ஓஹோஎன்றெல்லாம் இருக்கவில்லை. 1990 ஆம் ஆண்டு 'என் காதல் கண்மணி' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானாலும், 1991ல் வந்த ஸ்ரீதரின் தந்துவிட்டேன் என்னை படம் ஓரளவு அடையாளம் காட்டியது. பிறகு பி.சி.ஸ்ரீராம் இயக்கத்தில்1992ல் மீரா திரைப்படம். இப்படியே அங்கொன்றும் இங்கொன்றுமாய் 1999 ஜனவரியில் வெளியான பார்த்திபனின்ஹவுஸ்ஃபுல் படம் வரை பல படங்களில் நடித்தவர். மலையாளம், தெலுங்கு என்று போய் துணை நடிகர், துண்டு துக்கடா என்றெல்லாம் பாராமல் வெறியோடு நடித்துக்கொண்டே இருந்தவர். 
டிசம்பர் 1999 ல்  வெளியானது பாலாவின் 'சேது'. ஊரே பற்றிக் கொண்டாற்போல, ‘யார்யா இந்த மனுஷன் என்று கொண்டாடியது. விக்ரமை ஓரளவு தெரிந்திருந்த போதிலும், சேது படம் வெளிவந்தபோதுதான்,  ‘அட.. அமராவதி படத்தில் இவர் அஜித்க்கு டப்பிங் குரல் கொடுத்தார்.. காதலன்ல பிரபுதேவா குரல் யார்துன்னு நெனைக்கற?விக்ரமுது! என்று இவரைப் பற்றிய விவரங்களைச் சொல்லி மகிழ்ந்தவர்களில் நானும் ஒருவன். கென்னி என்று நண்பர்களால் அழைக்கப்படும் விக்ரம், எங்களைப் போன்ற ரசிகர்களால் 'சீயான்' என்று அழைக்கப்பட்டது சேது படத்தினால்தான்.
 
சேது படத்தின் கடைசி காட்சியில் இயலாமை கலந்தபடி நாயகியின் உடலைவிட்டு நீங்கி வெளியே நடக்கும் காட்சியில், ஒரு தேர்ந்த நடிகருக்கான அனைத்துத் திறமைகளையும் வெளிக்காட்டியிருப்பீர்கள்.

சில நிமிடங்களே வரும் பெண் கதாபாத்திரம் என்றாலும் சரி.. உழைப்பு நூறு சதம்தான்! 'அந்நியன்' திரைப்படத்தில்'மல்டிபிள் ஸ்பிலிட் பெர்சனாலிட்டி' யாக ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ராமானுஜம் என்கிற அம்பியாக, சமூக நலனுக்கெதிரானவர்களைப் பழிவாங்கும் அந்நியனாக, நாயகியை விரட்டி விரட்டிக் காதலிக்கிற ரெமோவாக மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற உணர்ச்சிகளைக் கொண்டிருக்கிற பாத்திரம்.
உங்களது சக்ஸஸ் சீக்ரெட், அர்ப்பணிப்புதான். இயக்குநர் ஷங்கரின் '' திரைப்படத்திற்காக உடல் எடையைக் கூட்டியும், பின்பு, கடும் உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடுகளால் ஒல்லியாக இளைத்தும் ஆச்சரியப் படுத்தினீர்கள். படத்திற்கு என்ன தேவையோ அதைச் சற்றும் யோசிக்காமல் செய்யக்கூடியவர். உடல் இளைக்க வேண்டுமா உடல் எடையைக் கூட்ட வேண்டுமா உடல்நிலையைப் பற்றித் துளியும் கருத்தில் கொள்ளாமல் நூறு சத உழைப்பைத் தன் ஒவ்வொரு படத்திலும் ஆரம்பம் முதலே செயல்படுத்தி வருபவர்.என தங்களைப் பற்றிய எங்களின் அபிமானம் எல்லாம் அதிகபட்ச வெகுமானம். 
சிறந்த நடிகருக்கான தேசிய விருதும், தமிழ்நாடு மாநில அரசின் கலைமாமணி விருதும் பெற்றுள்ளவர் நீங்கள். இந்திய திரைப்படத் துறையின் ஐந்து ஃபிலிம்ஃபேர் விருதுகளும் மிலான் பல்கலைக்கழகம் 2011ஆம் ஆண்டு கொடுத்த கௌரவ டாக்டர் பட்டமும் பெற்ற பெருமைக்குரிய எங்களின் சீயான் நீங்கள்.
  
தனது ரசிகர் மன்றத்தின் மூலமாக ஏழைகளுக்கு இருதய அறுவை சிகிச்சைகள், வறுமையால் கல்விகற்க முடியாத குழந்தைகளுக்கு கல்வியளித்தல் போன்ற சமூகப் பணிகளையும் செய்து வருகிறார். சமீபத்தில் சென்னையில் நிகழ்ந்த அதீத மழை வெள்ளப்பெருக்கின் கூட 'Spirit of chennai' எனும் பெயரில் வெள்ள நிவாரணப் பாடல் ஒன்றை தயாரித்து அவரே இயக்கினீர்கள்.
 
2011 ஆம் அண்டு 'UN - HABITAT' அமைப்பு உங்களைத் தூதுவராக நியமித்தது. இந்த அமைப்பின் நோக்கம் பெண்கள் முன்னேற்றம், இளைஞர்களுக்கு அதிகாரம் வழங்குதல், சமூக வேறுபாடுகளை வேரோடு களைதல் மற்றும் சிறப்பான நீர் மேலாண்மை போன்ற திட்டங்களை பரவலாக அனைவரிடமும் கொண்டுசேர்ப்பது என்பதும் குறி்ப்பிடத்தக்கது.
 
எல்லாவற்றிற்கும் மேலாக கேரளாவில் நிகழ்ந்த விழா ஒன்றில் தங்களை நோக்கி வந்த ரசிகரை காவலர்கள் தாக்க அவர்களைத் தடுத்து அந்த ரசிகனை ஆட்கொண்டு அவனது மகிழ்ச்சிக்கு செவிமடுத்தீர்கள் என்பது எங்கள் நெஞ்சங்களைக் குளிர்வித்த நீரூற்று.

 இதுவரை கூறியதெல்லாம் தாங்கள் இவ்வளவு நாட்கள் வரை செய்திட்ட சாதனைகளின் சரீரம்.  அந்தச் சாதனைகள் மென்மேலும் சிறந்தோங்கி வளர வேண்டும் என்பதே எங்களின் அவா.  இந்நேரத்தில் தங்களுக்கு திருமண வயதில் பெண் இருக்கிறார் என்பதே ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தான் எனக்குத் தெரியும்.  அந்த அளவிற்கு நீங்கள் வயது முதிர்ந்தவர்கள் என்பதை இந்த செய்தி தான் எங்களுக்கு நினைவு படுத்தியது.
 
தங்கள் புதல்வியின் திருமணம் சிறப்பாகவும் செம்மையாகவும் நிகழ எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  தங்களுக்கு இந்த மகிழ்ச்சிகரமான நேரத்தில் ஒன்று கூற விழைகிறேன்.  நடிகரை நடிகராக மட்டுமே பார்க்க வேண்டும் என்பது முற்போக்குவாதிகளின் கூற்று.  அது ஏற்றுக் கொள்ளக் கூடியதும் கூட. அது மற்றவர்களுக்கு பொருந்தும் என்று சொன்னலும்நான் தங்களை அவ்வாறு பார்ப்பதில்லை.நடிகர் என்கிற தகுதியைத் தாண்டி நிறைய அனுபவமும் பொதுநலனும் கொண்ட தங்களின் வாழ்வில் இது ஒரு முக்கியப் பங்கை அளிக்கலாம்.
 
மாறிவரும் இந்தக் காலாச்சார சூழலில் நாம் வாழும் பூமி மிகவும் அபாயகரமான நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது.அதே வேளையில் இருக்கின்ற மனிதர்களுக்கிடையேயான இடைவெளி என்பது குறைந்து கொண்டே வருகிறது.  எல்லா வற்றிற்கும் மேலாக மனித குலம் தம் குலத்தையே அதிகம் நாடுவதில்லை.  நீங்கள் தங்களின் புதல்வியின் திருமணத்தை எவ்வாறெல்லாம் நிகழ்த்த வேண்டும் என்று எண்ணி இருப்பீர்கள் என்று  ஒரு தந்தையின் இடத்திலிருந்து நானறிகிறேன்.

ஆயினும் தற்போது நடிகை வித்யா பாலன் வெளியிட்டிருக்கும் திருமணம் குறித்த பெண்களின் பார்வை என்ற கணக்கெடுப்பில்,  58 % சதவிகிதர்க்கும் மேலான  பெண்கள் தங்கள் திருமணம் ஆடம்பரமாக இருப்பதை விரும்பவில்லை என்று பதிவு செய்திருக்கிறார்கள்.  பெண்ணை ஆடம்பர பொருளாக பார்க்கும் உச்சம் தான் ஒரு பெண்ணின் திருமண கோலம்அவள் தலை நிமரக்கூட வாய்ப்பில்லாத வகையில் ஆபரண நகைகளை அவள் மீது வலுக்கட்டாயமாக  திணிப்பது.
 
இந்த சமூகத்தின் முன்னணியில் இருக்கக்கூடிய சீயான் எல்லாருக்கும் முன் மாதிரியாக தனது புதல்வியின் திருமணத்தை நிகழ்த்த வேண்டும் என்பது எனது அவா.  அது பசுமைத் திருமணமாக இருக்கலாம்புத்தகக் கொடை திருமணமாக இருக்கலாம்விவசாயிகள் மகிழ்வுறும் வகையிலான திருமணமாக இருக்கலாம்.  பிளாஸ்டிக் தவிர்ப்புத் திருமணமாக இருக்கலாம்அதைத் தாண்டி தமிழ் முறைப் படி எளிய திருமணமாக இருக்கலாம். 
 
எல்லாரும் வியக்கும் வகையில் திருமணம் என்பது ஆடம்பரத்தில் இல்லஅதிசயிக்கும் ஆழ்ந்த சித்தாந்தத்தில் உள்ளது என்பதை உணர்த்த வேண்டும்எங்கெல்லாம் இது போல் முயற்சி செய்பவர்களை எள்ளி நகையாடுபவர்கள் இருக்கிறார்களோஅவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை சீயான் தர வேண்டும்,என்பதே எனது அவா.  நீங்கள் அவ்வாறு முயற்சி செய்தால்அது எங்களுக்கு மேலும் புத்துணர்ச்சியைத் தரும்மேலும் அது பலரை இயற்கையை நோக்கி அழைத்துச் செல்லும்,

 
நல்ல பாதையைத் துவக்குவதற்கு அதிலே பயணிப்பதற்கு புதிதாக இயக்கம் கட்டி காலம் முழுவதும் வழி நடத்துவது தேவையில்லை. சிறு செயலின் மூலம் சமூகத்தின் மாற்றத்தை தர முடியும் என்பதை நீங்கள் செய்ய வேண்டும்செய்வீர்கள் என நான் நம்புகிறேன். அதனைத் தங்கள் மகளின் திருமணம் என்னும் நிகழ்விலிருந்து துவக்க வேண்டும் என எண்ணுகிறேன்.

வெகு பிரமாண்ட திருமணங்கள் வெற்றிகரமாக போகாததற்கு அந்த நபர்களும், அவர்கள் குடும்பமும் ஒரு காரணமாக இருந்தாலும், திருமணத்திற்கு அதிவிரயம் செய்யப்பட்ட பணமும், அதைப் பார்த்து சபித்து தன்னால் தன் தேவை நிறைவேற்ற வியலாத சாமானியனின் பார்வையாகக் கூட இருக்கலாம். ஏதோ ஒரு தேசத்தில் வாழும் சராசரி சாமனியனும் தங்கள் மகளின் திருமணத்திற்கு மனமார வாழ்த்த வேண்டும் என ஏங்கும் உள்ளத்தில் எனது உள்ளமும் ஒன்று.
 
தங்களின் மகள் அக்ஷிதா அவர்களுக்கு இனிய திருமண வாழ்த்துகள்.
 
இப்படிக்கு,
 தங்களின் மீது தீராத அபிமானமும்
 தெவிட்டாத நல்லன்பும் கொண்ட 
மேற்படி எழுதிய இரசிகன் 

விக்ரம் மீது அணைகட்டவியலாத இரசிகர் ஒருவர் நடிகர் விக்ரம் மகளின் நிச்சயதார்த்தம் குறித்த தகவல் அறிந்து 06.04.2016 அன்று பொருண்மை சொல்ல, அவருக்காய் என் நடையில் எழுதிய கடிதம். 08.04.2016 அன்று நடிகர் விக்ரம்-க்கு அனுப்பப்பட்டது இக்கடிதம்.

- த.க.தமிழ்பாரதன்
28.10.2017