நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

செவ்வாய், 21 மே, 2019

மனைவி செல்லம்மாவிற்கு பாரதியார் எழுதிய கடிதம் - 1901

ஓம் 
ஸ்ரீகாசி
ஹநுமந்த கட்டம்

          எனதருமை காதலி செல்லாம்மாளுக்கு ஆசீர்வாதம். உன் அன்பான கடிதம் கிடைத்தது. நீ என் காரியங்களில் இத்தனை பயப்படும்படியாக நான் ஒன்றும் செய்யவில்லை. விசுவநாதன் அனாவசியமாக உனக்குப் பயத்தை விளைவித்திருக்கிறான். நான் எப்போதுமே தவறான வழியில் நடப்பவனல்ல. இதைப் பற்றி உன்னைச் சந்திக்கும் சமயங்களில் விவரமாகக் கூறுகிறேன். நீ இந்த மாதிரி கவலைப்படும் நேரங்களில் தமிழை நன்றாகப் படித்து வந்தாயானால் மிகவும் சந்தோஷமுறுவேன். 

உனதன்பன்,
சி. சுப்ரமணிய பாரதி


மனைவி செல்லம்மாவிற்கு பாரதியார் எழுதிய கடிதம் - 1901


(16.05.2019 அன்று புதுச்சேரி பாரதியார் நினைவில்லத்திற்கு சென்றிருந்தபோது படியெடுத்தது) 

#தக


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக