நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

வியாழன், 13 ஜூன், 2019

“கைத்தறி”க்கான விழிப்புணர்வு வாசகங்கள்


Our Handloom
Our Pride

Wearing Handloom
Looking Handsome

Buying Handloom Dresses
Deeloping Handloom workers

Producting Handloom
Protecting Culture

Buy the Handloom
For the Nation

Lets Wear Handloom
Its our Headline

மேல் அணிய இனியது
காலணியத்திற்கு எதிரது

காந்தி தந்த ராட்டை
பலப்படுத்தும் நாட்டை

கைத்தறி துணிகள்
வளம்தரு துறைகள்

கைத்தறி பயன்படுத்து
பண்பாட்டை பலப்படுத்து

கைத்தறி உற்பத்தி அதிகரிப்பு
உள்நாட்டுப் பொருளாதார மேம்பாடு

கைத்தறி வாங்கிடுவோம்
தேசத்தை மேம்படுத்திடுவோம்.

04.08.2017 | தேசிய கைத்தறி தினத்திற்காக எழுதப்பெற்றது.

சனி, 8 ஜூன், 2019

தேசிய நெல் திருவிழா - 2019



13ஆம் ஆண்டு தேசிய நெல்திருவிழா

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ஆண்டுதோறும் நடைபெறும் நெல்திருவிழா இந்த ஆண்டு (2019) ஜூன் 8, ஜூன் 9  நாட்களில் நடைபெறுகிறது.

கிரியேட் நமது நெல்லைக் காப்போம் அமைப்பு வாயிலாக 2006ஆம் ஆண்டு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது நெல் திருவிழா. அது முதல் கடந்த 12 ஆண்டுகளாக நமது நெல்லைக் காப்போம் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்து நெல் திருவிழாவை சிறப்பாக நடத்தியவர் நெல் ஜெயராமன். தோல்புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நெல் ஜெயராமன் கடந்த 2018 டிசம்பர் 6ஆம் நாள் மறைந்தார். அவர் இல்லாது நடக்கக்கூடிய முதலாவது நெல் திருவிழாவாகும் இது.

நம்மாழ்வாரும் நெல்ஜெயரமானும் இயற்கை வேளாண்மையை தமிழக மக்களிடத்தில் கொண்டு சேர்த்த இருபெரும் ஆளுமைகள். வேளாண்மை அழிந்து வருகிறது, செயற்கை உரங்களால் மண் மலடாகி வருகிறது, இது தவிர்த்து, காவிரி டெல்டாவில் ஓஎன்ஜிசி, ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்றவற்றால் இயற்கை வளமே இல்லாத போகும் சூழல் ஒருபக்கம். இவற்றுக்கிடையே இவையாவற்றையும் தாண்டி விவசாயத்தை இலாபகரமானதாக மாற்றி, இயற்கை சார்ந்து பயிரிட்டு சாதிக்கலாம் என்பதை மற்ற விவசாயிகளுக்கெல்லாம் முன்மாதிரியாக இருந்து செயல்படுத்திக் காட்டியவர் நெல் ஜெயராமன்.

அவர் இல்லாத நடக்கும் முதல் நெல் திருவிழா இதுவாகும்.  தேசிய நெல்திருவிழாவின் முதல் நாளான சனிக்கிழமை காலை உழவர்களின் பேரணி, கண்காட்சித் திறப்பு, மறைந்த நெல் ஜெயராமன் மற்றும் முன்னோடி உழவர்களின் படத்திறப்பு விழாவும், புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இதையடுத்து, தமிழக அரசின் சார்பில் உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் பங்கேற்று, விழாப் பேருரையாற்றுகிறார். வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலர் சுகதீப்சிங் பேடி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் என்.குமார் உள்ளிட்ட முக்கிய அரசு அதிகாரிகள் பங்கேற்கின்றனர். தமிழகம் மட்டுமின்றி கேரளம், ஒடிசா, மேற்குவங்கம், ஆந்திரம், ஜார்கண்ட ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வேளான் வல்லுநர்களும் பங்கேற்க உள்ளனர்.

நெல்திருவிழாவில் இரண்டு நாட்களும் பல்வேறு தலைப்புகளின் கீழ் கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. இவ்விழாவில் பாரம்பரிய நெல்ரகங்களில் காணப்படும் பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புத்திறன், இயற்கை வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துதல், மதிப்புக்கூட்டுதல், சான்றிதழ் பெறுவதில் விவசாயிகளின் கூட்டு முயற்சிகள், விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள், நுகர்வோர் பார்வையில் பாரம்பரிய நெல் ரகங்கள், விதை மீதான உழவர்களின் உரிமையும் அரசின் நெருக்கடிகளும், அழிவின் விளிம்பிலுள்ள நாட்டுரக கால்நடை இனங்கள், வறட்சியை எதிர்கொள்ள சமூக அளவில் மேற்கொள்ள வேண்டிய நீர்மேலாண்மை யுக்திகள் உள்ளிட்ட தலைப்புகளில் கருத்தரங்கமும், விவாதங்களும் நடைபெற இருக்கின்றன.

நெல் ஜெயராமன் நினைவாக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மருத்துவ ஆலோசனை முகாம் சித்த மருத்துவர் கு. சிவராமன் மற்றும் சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மைய மருத்துவர் மல்லிகா தலைமையில் நடக்கவிருக்கிறது. பாரம்பரிய உணவு தயாரிக்கும் போட்டியும், மரபார்ந்த விளையாட்டுகள் போட்டியும் நடத்தப்படவுள்ளன. பேரணி, கருத்தரங்கம், கண்காட்சி, கலை நிகழ்ச்சி, உணவுத்திருவிழா என திருத்துறைப்பூண்டி ஏஆர்வி தனலெட்சுமி திருமண அரங்கில் நடைபெறவுள்ள உணவுத்திருவிழா-2019 களைகட்ட இருக்கிறது.

நெல் திருவிழாவின் முதன்மையான நோக்கமே விதை நெல் தான். கடந்தாண்டு இயற்கை விதை நெல் வாங்கிச் சென்ற விவசாயிகள் அதனை இரட்டிப்பாக திரும்பித்தர வேண்டும். இந்தாண்டு புதியதாக விதை நெல்வாங்கிச் செல்லும் விவசாயிகள் அடுத்த ஆண்டு இரட்டிப்பாக அவற்றைத் தர வேண்டும். அறாத்தொடர்ச்சியாக நிகழும் இது பல்கிப் பெருகி இயற்கை வேளாண்மையை நீடித்து நிலைத்திருக்கச் செய்யும் முறையாகும். தனிமனிதரின் பிடியில் துறைசார்ந்த யாவற்றையும் கொண்டிருக்கும் கார்ப்பரேட் கலாச்சாரம் பல்கிப்பெருகி வரும் உலகமயமாக்கல் சூழலில்,  அடையாளங்கண்ட இயற்கை பயிர்களையெல்லாம் விதை நெல்லாக பிறருக்கும் கொடுத்து வேளாண்மையை பொதுவுடைமையாக்கிய பெருமை நெல் திருவிழாவையே சேரும்.

நெல் திருவிழாவில் பங்கேற்க தமிழகத்தின் அனைத்து விவசாயிகளும் பொதுமக்களும் இயற்கை ஆர்வலர்களும் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

-    த.க.தமிழ்பாரதன்
-   படங்கள் க.சதீஷ்குமார்

புதன், 5 ஜூன், 2019

இலையில் தங்கிய துளிகள் | வைரமுத்து கவிதை


இலையில் தங்கிய துளிகள்

காலப் பெருவெளியில்
சிலப்பத்தாண்டுகள் கரைந்து கழிந்தபின்
மீண்டும்கண்டுசெல்ல வருகிறேன் உன்
காதல் திருமுகம்

அவ்வண்ணமே பொலியுமா
பூமலிந்த பொன்முகம்?

உன் கிராம்ம் நெருங்க நெருங்க
மார்புக் கூட்டில் உயிர்வேகுதடி

நகரா மரங்கள் நகர்வதாகவும்
நகரும் வாகனம் நிலைகொண்ட்தாகவும்
நீளப் பொய் சொல்கிறது நெடுஞ்சாலை

கலாபம் கட்டி ஆடுகின்றன
நிறைவேறாத கனவுகள்.

பட்டுப் பாவடையின் காற்றடிப்போடு
பணிவில் திமிர்காட்டும் பார்வைகளோடு
முளைத்தும் முளையா முன்மலர்களைச்
சண்டையிட்டு முட்டும் ஜடை ஒதுக்கி
சலங்கை கட்டிய மான்குட்டியாய்
தரைதோயாத கலர்மேகமாய்
வீதிமரங்களின் பூக்கள் திறந்து
ஒட்டுமொத்த நாணத்தை
உருண்டை திரட்டி என் மேலெறிந்து
நீஎன்னைக் கடந்த காலம்-
தெருவெல்லாம் கார்த்திகைதான்!
மனசெல்லாம் மார்கழிதான்!

ஏழோ எட்டோ இருக்குமா
பழகி வந்த ஆண்டுகளும்
பகிர்ந்து கொண்ட வார்த்தைகளும்?

இன்றேனும் பேசு பெண்ணே!

“வாங்க”

ஆண்டுகள் தோண்டிய அதேகுரல்
ஆனால் நீ மட்டும் நீயில்லை

வீதிஎயல்லாம் வர்ணங்கள்
விசிறியடித்த அவள் எங்கே

மழையூறிய ஓவியமாய்ச்
சாயம்போன நீ எங்கே

காலம்தன் சவுக்கைப்
பூக்கள் மீது சொடுக்காமலிருக்கலாம்

மீண்டும்
வார்த்தைகள் தொலைந்த மொழிகளாய்
நீயும் நானும்

பூச்சரமிட்ட புகைப்படம் சொல்லியது
உன் அம்மாவின் மரணம்

சரத்தின் சருக்சொல்லியது
உன் பொருளாதாரம்

புகைப்படத்திலும் சிரிக்கத் தெரியாமல்
பாவமாய் உன்னிரு பிள்ளைகள்

தேநீர் தந்தாய்
பட்டுவிடக் கூடாதென்ற உன் அச்சத்திலும்
தொட்டுவிடக் கூடாதென்ற என் நடுக்கத்திலும்
சிக்கிய கோப்பை சிறிதே தள்ளாடியது

மௌனம் திரட்டிப் பழங்கதை பேசி
வெள்ளையடிக்காத சுவரில் பல்லி பார்த்து
ஓரக் கண்களால் உயிர்தடவி

இனிமேலும் இஞ்கிருப்பின்
கண்ணீரோடு உண்மையும்
கொட்டிவிடும் என்றஞ்சிக்
கும்பிட்டு வெளியேறி

கடைசி விடை சொல்ல
ஜன்னல் கம்பிகளில் உன்
கண்கள் தேடிய போது

கார்க்கதவு சாத்த வந்த கணவன் சொன்னான் :
”நீங்களே அவளுக்குத்
தாலிகட்டியிருக்கலாம்”

உன்போல் பெண்மக்கள்
ஊர் உலகில் எத்தனையோ
காதலுற்ற சேதியினைக்
காதலர்க்குச் சொல்லாமல்
கணவர்க்குச் சொன்னவர்கள்.

-    வைரமுத்து | கொஞ்சம் தேநீர் நிறைய வானம் தொகுப்பிலிருந்து.


#தக 05.06.2019