நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

வியாழன், 17 மே, 2018

துயிலாத நினைவுகள் | கவிதை | அன்னையர் தினம்


துயிலாத நினைவுகள்




தேனாய் ! தெளிந்தேனா !

தமிழ்த்தேனாய் இனித்தேனா !

 

இருந்தேனா எனத் தெரியவில்லை

உயிர்ப்பிழைத்தேனா என்பதறியவில்லை...

 

காதிருந்தும் கேட்கவில்லை,

வாயிருந்தும் உண்ணவில்லை...

 

என் புவியில் நான் மட்டும்

கால் எடுத்து வைத்தால் வான்முட்டும்

 

கால்நீட்டிச் சண்டையிட்டால்

காதிரண்டும் கேடயமாம்

 

பேசக்கூட யாருமில்லை; பேச கூட யாருமில்லை

பேசத்தடை ஏதுமில்லை

 

உடுத்த ஆடை ஒன்றுமில்லை

படுத்து றங்க பாயுமில்லை

 

இருட்டிலே கழிந்தன பகல்கள்

எப்படியோ கடத்தினேன் போங்கள்

 

இரைப் பையடக்கி தலைப்பை யடக்கி

என்னுயிரும் இருந்தது

 

கையடக்கி காலடக்கி பல

நாளடங்கிச் சென்றது

 

விழியிரண்டும் விரதம்தான்

விழிதிறக்கையில் உலகம்தான்

 

 

அழுதுகொண்டே பிறந்தேனாம்

ஆளநானும் அவதரித்தேனாம்

 

கருவறைச் சிறைவாசம்தான்

கடுகளவும் நினைவில்லை

 

ம்ஹூம்இவை

அம்மா சொன்னதாய் நினைவுகள்

அவள் கண்ணுறக்கம் கலைத்த பொழுதுகள்

 

அவள் துயிலாத பொழுதுகளே

என் துயிலாத நினைவுகள்....


<3 p="">
<3 p="">-த.க.தமிழ் பாரதன்
<3 p="">(அனைத்துக் கல்லூரிகளுக்கிடையிலான கவிதைப் போட்டியில் பரிசு வென்ற கவிதை ) நாள் : 25.02.2018 | இடம் : அதிராம்பட்டினம் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக