நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

வெள்ளி, 22 நவம்பர், 2019

மின்னூல் என்றால் என்ன? அதனை கிண்டிலில் வாசிப்பது எப்படி?


ஈரிருநாள் இலங்கை மின்னூல் அமேசானில் 23.12.2019 மதியம் வரை  விலையின்றி (0₹) இலவசமாகக் கிடைக்கும். https://www.amazon.in/dp/B081D9YGMD என்ற லிங்க் வாயிலாக இந்தியாவில் வசிப்போர் நூலினைப் பதிவிறக்கி கிண்டிலில் வாசிக்கலாம்.


மின்னூல் அறிமுகம் :
      காகிதத்தில் வாசிக்கின்ற எழுத்துகளுக்கு மாற்றாக, எலெக்ட்ரானிக் கருவிகளில் வாசிக்கப்படும் எழுத்துகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. அச்சில் வாசிக்கப்பட்ட புத்தகங்கள் எலெக்ட்ரானிக் கருவிகளில் தவழத் தொடங்கிவிட்டன. எதிர்காலத்தில்  எலெக்ட்ரானிக் புத்தகங்களே (மின்னூல்) எழுத்துலகை ஆளும் என எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

எப்படி வாசிக்க வேண்டும்?

      அமேசான் தளத்தில் கணக்கு வைத்துள்ளவர்களால் மட்டுமே இதனைப் பயன்படுத்த முடியும். அமேசானில் லாக்-இன் செய்தபின், https://www.amazon.in/dp/B081D9YGMD லிங்க்-ஐ தொட்டால் புத்தகம் இருக்கும் பக்கத்திற்குச் சென்றுவிடும். தற்போது விலையின்றி இலவசமாகக் கிடைப்பதால், ஒரு கிளிக் செய்யும்போது, நேரடியாக கிண்டில் செயலிக்கு புத்தகம் சென்றுவிடும். அங்கு படிக்கலாம்.


கிண்டில் என்றால் என்ன?

      கிண்டில் என்பது மின்னூல்களைப் படிக்கும் கருவியாகும். இதனைத் தனியாக வாங்கியும் பயன்படுத்தலாம். இதனை ஆண்ட்ராய்ட் போனில் இருக்கும் பிளே ஸ்டோரில் சென்றும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பின், இந்தச் செயலியில் அமேசான் கணக்கைக் கொண்டு உள்நுழையவேண்டும். அமேசானில் வாங்கும் நூல்கள் தாமாக இந்தச் செயலியில் திறந்துவிடும். (கிண்டில் ஆப் லிங்க் : https://play.google.com/store/apps/details?id=com.amazon.kindle )

மதிப்பீடுகள் Rating & கருத்துகள் Comments ஏன் செய்ய வேண்டும்.?

      ஈரிருநாள் இலங்கை நூல், தற்போது pentopublish2019 போட்டியின் குறுநூல் பிரிவில் பங்கெடுத்திருக்கிறது. அதில் இறுதிச்சுற்றுக்குச் செல்லவதற்கு மின்னூல்களின் Rating மற்றும் comments அடிப்படையானது. ஆகவே, மின்னூலைத் தரவிறக்கியதோடு, படிப்பதோடு, கருத்துகளையும் மதிப்பீடுகளையும் செய்தல் அவசியமான ஒன்றாகும். கருத்துகளை ஆங்கிலத்தில் பதிவு செய்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளும்.


நூலைப் பற்றி :

2017 நவம்பர் மாதத்தில் இலங்கைக்குப் பயணப்பட்டேன். நான்கு நாட்கள் பயணித்துத் திரும்பிய அனுபவங்கள் படைப்பு குழுமத்தின் தகவு மின்னிதழில் ஈரிருநாள் இலங்கை” எனும் தலைப்பில் தொடராக வெளியானது. மொத்தம் ஏழு மாதங்கள் வந்த தொடரைத் தொகுத்து நூலாக வெளியிடலாமே என்ற சிலரது விழைவு தற்போது நிறைவேறி இருக்கிறது.


இதுவரை கண்டிராத ஒருநாட்டில் சென்றது, நடந்ததுஉண்டதுபேசியதுகற்றதுபெற்றது என்பனவற்றை இந்நூலில் ஆவணப்படுத்தியுள்ளேன். முதுகலை பயின்ற மாணவனின் பார்வையில் அயல்நாட்டில் நான்கு நாட்கள் எப்படி உணரப்பட்டன என்பதை இந்நூல் அறிவிக்கும். ஒரு சராசரி குடும்பத்தில் பிறந்துஇந்தியப் பிரதிநிதியாக பன்னாட்டு அரங்கில் பங்கெடுத்ததன் வெளிப்பாடு இந்நூல். நீளும் கோட்டின் ஆதிப்புள்ளி இது.


நாடுகளும் அங்கு நூல் கிடைக்கும் இணைய முகவரிகளும் :
இந்தியா     : https://www.amazon.in/dp/B081D9YGMD
அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, இன்னபிற நாடுகள் : https://www.amazon.com/dp/B081D9YGMD
இங்கிலாந்து : https://www.amazon.co.uk/dp/B081D9YGMD
ஜெர்மனி        : https://www.amazon.de/dp/B081D9YGMD
பிரான்சு          : https://www.amazon.fr/dp/B081D9YGMD
ஸ்பெயின்     : https://www.amazon.es/dp/B081D9YGMD
இத்தாலி         : https://www.amazon.it/dp/B081D9YGMD
நெதர்லாந்து : https://www.amazon.nl/dp/B081D9YGMD
ஜப்பான்         : https://www.amazon.co.jp/dp/B081D9YGMD
பிரேசில்        : https://www.amazon.com.br/dp/B081D9YGMD
கனடா           : https://www.amazon.ca/dp/B081D9YGMD
மெக்சிகோ   : https://www.amazon.com.mx/dp/B081D9YGMD
ஆஸ்திரேலியா :https://www.amazon.com.au/dp/B081D9YGMD


-தக | 22.11.2019



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக