நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

சனி, 22 டிசம்பர், 2018

அறுவடையாகும் உயிர்களன்றோ.....(கீழவெண்மணி)


உண்டிக் கொடுத்தோன்
உயிர்க் கொடுத்தோன் அன்று
உண்டிக் கொடுத்தோன்
உயிர் மாய்த்தான் இன்று

மானம் பார்த்த உழவர் குடி
மரித்துப் போன தெதனாலோ? 

வானம் பார்த்த பூமியெல்லாம்
வீணாய்ப் போன ததனாலோ ..

அணை தாண்டா காவிரி
ஐந்திணை தீண்டா ததாலோ ...

மழை மட்டும் வேண்டுமென
யாகம் பல செய்திட்டும்

தாகம் தீர்க்க மட்டுமென
நன்னீரும் நமை ஏமாற்றியதாலோ ...

பாவம் தான் பயிரெல்லாம்
நோவு காணாது இறந்திட்டதாலோ. ..

மாறிய மண் தன்மையினால்
மாநில மீதினில் மாண்டாரோ! 

இல்லெனின் ,

கண்ணெட்டும் தூரமுட்டும்
முப்போகம் விளைந்திட்டும்
தப்பாமல் சாதிவர்க்கம்
சரமாரியாய் வளர்ந்திட்டும்

அழித்தொழிக்க முனைந்திட்டு
செந்நெல்லாய் விளைந்தாரோ !

அறுவடையாகிடும்
பயிர்களெல்லாம்
ஒருவகை உங்கள்
உயிர்கள் அன்றோ...


த.க.தமிழ்பாரதன்
25.12.2016


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக