நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

செவ்வாய், 23 ஜூலை, 2019

ஜேஎன்யு விண்ணப்பம் முதல் விடுதி வரை | பகுதி 4


மார்ச் 20
ஆரம்ப்பா – 18 நிகழ்வு நல்லபடியாக தீபக் கிருஷ்ணனுடன் சேர்த்து அரங்கேற்றினேம். (நிகழ்ச்சிச்சுட்டி https://youtu.be/X-lr2axe2Ig). ஆனால்அரசியல் வயப்பட்ட பகடி நிகழ்வாகிப் போனதால்மாணவர்களிடையே வரவேற்பையும் நிர்வாகத்தில் இருக்கும் பேராசிரியர்களிடத்தில் எதிர்ப்பையும் பெற்றுக்கொடுத்ததுஒரு பேராசிரியர் நேரடியாகவே, “உன்னிடம் இதுபோல் எதிர்பார்க்கவில்லை” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்இதற்கொரு காரணம் என்னவெனில்தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் மேடையில் அரங்கேறும் நிகழ்வுகள் யாவும் முன்னமே விழாக்குழுவினரால் ஒப்புதல் பெற்றாக வேண்டும்ஆனால்எங்கள் தென்றல் ஆர்மி எப்போதும் அப்படிச் செய்ததில்லைநேரடியாக மேடை தான்ஏனெனில்மேடையேறும் முன்னர்வரை என்ன வெளிப்படுத்தப் போகிறோம் என்பது எங்களுக்கே தெரியாது.  மேடையேறியபின் மாறிய ஸ்க்ரிப்ட்களும் உண்டுஅதுவே அடையாளமாகிப் போய்விட்டதும் கூட.
சரிஜேஎன்யு விற்கு வருவோம்நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தினசரி ஜேஎன்யு பல்கலைக்கழக இணையத்திற்குத் தவறாது வருகை புரிந்தால்மாணவர் சேர்க்கை குறித்த எந்தப் பதிவும் இடம்பெற்றிக்காதுஆனாலும்ஏதுமற்ற வானத்தில் எதையோ நோக்கும் ஏது இலார் போலநோக்கிக்கொண்டிருந்தேம்இன்று வரும்நாளை வரும்அடுத்தவாரம் வரும்அடுத்தமாதம் வரும் என நாட்களின் எண்ணிக்கை மூன்றிலக்கத்தையே தொட்டுவிட்டது.
இதற்குள்ளாக,  முதுகலைத்தேர்வுகள் முடிந்து, “ஐங்குறுநூறு நெய்தல் திணை (175-200) : எழுத்துசொல்லிலக்கண ஆய்வு” ஆய்வேடு முடிந்துபல்கலைக்கழகமே முடிந்து விடுமுறையே முடிந்துவிட்டதுகேட்பதற்கு ஒன்று போதும் என்றாலும் இரண்டு இருக்கும் செவியைப்போலஎதற்கும் இருக்கட்டும் என்றுசேரவிருப்பமில்லையெனினும் திருவாரூர் சியுடிஎன்-இலும் முனைவர்/ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு விண்ணப்பித்திருந்தேம்மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பொதுநுழைவுத்தேர்வில் தமிழில் முதல் மதிப்பெண்(37%)  பெற்றிருந்தேம்இருப்பினும்,  50%க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கே சேர்க்கை நிகழும் என எங்கோ ஒரு ஏசி அறையில் கல்வி வல்லுநர்கள்(!) எடுத்த முடிவில் அந்தக் கல்வியாண்டில் சியுடிஎன் தமிழ்த்துறையில் மொத்தம் இரண்டு மாணவர்களே JRF ஒதுக்கீட்டின்கீழ் இணைந்தனர்மீதமிருந்த பெரும்பாலானோர் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்குப் படையெடுத்தனர்.

இதற்கிடையே சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்ட சேர்க்கைக்கான அறிவிப்பு வந்திருந்ததுசென்னைப் பல்கலையில் இரண்டு துறைகள் உள்ளனஒன்று இலக்கியத்துறைமற்றொன்று மொழித்துறைமொழித்துறைக்கு விண்ணப்பித்திருந்தேம்மெரீனா வளாகத்தில் எழுத்துத் தேர்வு நடைபெற்றதுமதியத்திற்கு மேல்நேர்காணல் என அறிவிப்பு வந்ததுஅன்றைய தினம் இராணிமேரி கல்லூரியில் எம்ஜிஆர் பேச்சுப்போட்டியைத் தமிழ் வளர்ச்சித் துறை நடத்தியதால்அங்கு சென்று நண்பர்களைப் பார்த்து பேசிமதிய உணவு முடித்தேம்.
மதிய உணவுக்குப் பின்னான நேர்காணல் சென்னைப் பல்கலைமொழித்துறைத் தலைவர் அறையில் நிகழ்ந்ததுமுகநூல் வழியே அடையாளந்தெரிந்த பேராசிரியர் சிலர் உள்ளிருந்தனர்சான்றிதழ் சரிபார்ப்பில் இயற்பியல்செம்மொழித் தமிழ் போன்றவை குறித்த வினாக்கள் எழுப்பி யிருந்தனர்காலை நடைபெற்ற எழுத்துத்தேர்வின் பிழைகளுக்கான காரணம் கேட்டறிந்தனர்எல்லாம் முடிந்தபின், ’நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால்சேர்வீர்களா ?’ என்ற கேள்விக்கு ஜேஎன்யு முடிவுகளுக்குப் பின்னரே இதற்கு பதில்கூற இயலும் எனக்கூறதேரின் கடிதம் வீடடையும் என்றனர்.

விடைபெற்றுவிடுமுறை நாட்களை எண்ணி எண்ணிக் கழியாதுமொத்தமாய்க் கழித்த வேளையில்நெட் தேர்வு வந்ததுதமிழ்வளர்ச்சித் துறையின் இளந்தமிழர் இலக்கியப்பட்டறை முகாம் வந்தது. 2017ஆம் ஆண்டு துறைக்கு வைத்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால், 2018-19ஆம் கல்வியாண்டு தொடக்கத்திலேயே (ஜூலை 16-22) முகாம் நடத்தப்பெற்றதுமதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் ஏழுநாள் நிகழ்ந்த முகாம் இதுவரை கலந்துகொண்டதிலேயே மிக ஆர்ப்பரிப்பான முகாமாகும்ஏழுநாளும் கலைகட்டியதுகீழடிமீனாட்சி அம்மன் கோயில் எனக் களப்பயணம்புலவர் இளங்குமணன் அவர்கள் உள்ளடங்கிய ஆளுமைகளின் பயிலரங்குகள் மிகப்பயனுடையாதாக இருந்தது. மாலை நடைபெற்ற கிராமியக் கலை நிகழ்ச்சிகளும் முகப்புத்தகத்திலும் மின்னரட்டையிலும் நேரம்தொலைத்த என்னைபோன்றவர்களுக்கு மிகப்பிடித்தமானதாக இருந்தது.
ஜூலை 20
மாலை ஆறுமணிக்கு கூட்ட அரங்கில் நிறைவு அமர்வு நடந்து கொண்டிருந்தது. வழக்கம்போல ஜேஎன்யு இணையத்தை பார்வையிட, முடிவுகள் வந்திருந்தன. இணையத்தைத் தீர்க்கமாகப் பார்க்க ஆர்வமிகுதியில் உலகத்தமிழ்ச் சங்கக் கூட்ட அரங்கிலிருந்து வெளியேறினால், ஜேஎன்யு பல்கலைக்கழகத்திற்கு தேர்வாகியுள்ளோம் என வரவேற்றது. அதுகாறும் உடனிருந்து பயணிக்க வைத்த யாவருக்கும் தேர்வான விடயத்தைக் குறுக்கும் நெடுக்குமாகச் சொல்லிமுடிக்க மணிமுள் ஒருவட்டம் அடித்திருக்கும்.

இரவு உணவுக்குள் இனிப்பும் சேர்த்து பகிர்ந்திடலாமென மதுரைத் தம்பி ஹரிபாலா வுடன் மதுரை சுற்றினால், எல்லாம் விலை உயர்வாகவிருந்தது. ஒருவருக்கெனில் வாங்கிக்கொடுத்திடலாம், ஒவ்வொருவருக்குமெனில் என்னசெய்யலாமென யோசித்து இனிப்பு மிட்டாய் பாக்கெட்டுகள் சிலவற்றை வாங்கினால், அந்த ஊரில் அதிகபட்ச சில்லரை விலை என்னவாக இருக்கிறதோ அவ்விலையில் தான் கொடுப்பார்களாம். அது தான் நிரந்தரவிலையும் கூடவுமாம். இத்தனைக்கும் அது சூப்பர் மார்க்கெட் வேறு.
“வாயிற் கடைமணி நடுநா நடுங்க,
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுட்த தான்தன்
அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்” என கண்ணகி தன் ஊரை அறிமுகப்படுத்தியதும், உயிர்நீத்த பாண்டிய நெடுஞ்செழியன் நினைவுக்கு வர, ஊர்ப்புராணங்கள், எப்படிலாம் விலை குறைப்பாங்க, எத்தனை சதவீதம் குறைப்பாங்கனுலாம் சொன்னாலும், அந்த சூப்பர்மார்க்கெட் விலைக் குறைப்பதாகத் தெரியவில்லை. அதைநீங்கினால் வேறிடம் தொலைவென்பதால் வேறுவழியின்றி அதிகபட்ச சில்லறை விலைக்கே மொத்தமாக வாங்கித் திரும்பினோம்.
  சியுடிஎன் தமிழ்த்துறையில் சேருவதற்கு ஆற்றுப்படுத்திய தமிழ்ப் பல்கலை. அண்ணன் சிவக்குமார் ஜேஎன்யுவிற்குத் தேர்வான விடயமறிந்து அன்றிரவு உறக்கத்திற்கு முன் பொதுவுடைமைப் புத்தகம் வாங்கிப் பரிசளித்தார். இரண்டுநாட்களில் விடைபெறும்முன், தமிழ்வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் விஜயராகவன், மதுரை உலகத்தமிழ்ச்சங்க இயக்குநர் முனைவர் கா.மு.சேகர், தமிழ்ப் பல்கலை. மேனாள் துணைவேந்தர் ம.திருமலை உள்ளிட்ட தமிழ்ச் சான்றோர்கள் கலப்புப் படிப்பு (Cross major) + ஆய்வுப்போக்கு குறித்து மேலும் நெறிப்படுத்தினர். நிறைவுநாள் சான்றளிப்பு விழாவில்  வீரயுகநாயகன் வேள்பாரியை மறுவாசிப்புக்குட்படுத்தியவரும்  இன்றைய மதுரை மக்களவை உறுப்பினருமான தோழர் சு.வெ யிடம் ஜேஎன்யு மாணவர் அறிமுகப்படுத்தி வழியனுப்பியது மதுரை.



ஜூலை 24
            ஊருக்கு வந்தபின், மூன்று நாட்களுக்குள் சேர்ந்தாகப் பணித்தது ஜேஎன்யு இணையம். தேவையானதை முன்னமே பெற்றுவைத்ததில் சிக்கலில்லை. பகடிவதை செய்யக்கூடாதென முத்திரைத்தாளில் நோட்டரிபப்ளிக்கிடம் கையெழுத்து வாங்கத்தான் பெரும்பாடாகிவிட்டது. கடையை மூடும் தருவாயில், பணமேதும் பெறாமல் தட்டச்சு பயிற்சி மையம் வைத்திருக்கும் ஜவகர் பத்திரம் எழுதித்தந்தார்.  “பணம் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறியபோது, பணம் பெறுவதாக இருந்தால் நாளைக்குத் தான் செய்திருப்பேன் என்று கூறிவிட்டார். கண்ணகி தான் எவ்வளவு சிறப்பான ஊரினை உடைமையாகக் கொண்டிருந்திருக்கிறாள். ஆனால், நோட்டரி பப்ளிக் பணம் பெற்றுக்கொண்டு கையெழுத்து போட்டுக்கொடுத்தார்.

ஜூலை 27
புதுதில்லி ஜேஎன்யுவில் சேர்க்கை. கூட்ட அரங்கில் அங்கு, இங்கு, அதற்கு, இதற்கு என ஒருவழியாக்கிவிட்டனர். மூளை கலங்கி, மூக்கொழுகாத நிலைதான். (2019-20 கல்வியாண்டில் தேசியத் தேர்வு நிறுவனம் NTA  வழியாக நுழைவுத்தேர்வுகள் நடத்தி, பட்டத்திற்கேற்ப நாட்களை பிரித்து, சில நடைமுறைகளைக் கடைபிடித்ததால் எளிமையாக இருந்திருக்கிறது சேர்க்கை) சேர்க்கை முடித்தாலும், முதல்நிலை இருந்தும் விடுதிக்காகக் காத்திருக்க வேண்டியிருந்தது.

ஒரு வாரத்திற்குள், தகர அகரமும் பகர அகரமும் தகர இகரமும் சேர்ந்தோடும் ஆறொன்றின் பெயரிலான விடுதி வாய்த்தது. மாடி எடுத்தால், வெயில்காலத்தில் வெக்கை, தரை தளம் எடுத்தால் குளிரில் கொடுமை, நடு தளமே நமக்கு ஏற்புடையதென பலரும் அறிவுறுத்தியிருந்தனர். சிகரெட், போதை வஸ்துக்களின் புழக்கம் அறைக்குள்ளிருப்பது தென்பட்டால், தவிர்ப்பது நல்லதெனவும் சொல்லியிருந்தனர் அனுபவசாலிகள். இவ்வுலகில் நாம் நன்றாக வசிப்பதற்கு நம்மோடு வசிப்பவரும்  நன்றாக இருக்கவேண்டியிருக்கிறது. எல்லா அறைகளும் அவசர அவசரமாகப் பிடித்துக்கொள்ள, சாளரக் கண்ணாடி துடைக்கப்பட்ட அறையொன்றின் நெடுநேர கவனிப்பிற்குப் பின் தெரிந்தெடுத்து நுழைந்தால், வடகிழக்குப் பிரதேச பையன் ’இல்ல மச்சி, சரி மச்சி’ என தன் MCC நினைவுகளிலிருந்து வார்த்தையெடுத்துப் பேசினான்.

கிட்டத்தட்ட பத்து மாதங்கள் இந்த சேர்க்கைக்காக எவ்வளவு அழைப்புகள், எவ்வளவு கலாய்ப்புகள், எவ்வளவு தவி(ர்)ப்புகள். இன்னும் ஓரைந்தாண்டுகளுக்கு பிஎச்டி என்று சொல்லி எல்லார் வாய்களையுமடைத்துவிடலாம் என்ற பெருமூச்சு.  

இதோடு வகுப்புகள் தொடங்கி, தேர்வுகள் முடிந்து, இப்ப ஆய்வுப் பணிக்கு வந்தாச்சி. எவ்வளவு வேகமாகப் போயிருக்கிறது இந்த ஓராண்டு. படுக்கையோட நூலகம் போயிடணும் எனச்சொன்ன அரசின் வார்த்தையை மட்டும் இன்னும் நிறைவேற்றவேயில்லை. இனியேனும் நிறைவேற்றினால் உருப்படலாம். 

தொடர் முற்றும், உருப்படுவதன்பொருட்டு பயணம் தொடரும்...

-தக
23.07.2019  

1 கருத்து:

  1. தகவின் எழுத்து சிந்தைகளுக்குள் சென்று சித்து விளையாட்டு காட்டுகிறது...! வாழ்த்துக்கள் சகோ.
    -இரா.ஹரிபாலகிருஷ்ணன்

    பதிலளிநீக்கு