நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

ஞாயிறு, 21 அக்டோபர், 2018

அவள் சண்டையிடப் பயணித்துக்கொண்டிருக்கிறாள்......



முதன்முறையாக அவனைச் சந்தித்த அந்தக் கணம் எப்படி இருந்தது என்று சொல்லுவதற்கு ஒன்றுமில்லை. ஒரு பெண்ணாக ஆயிரம் ஆண்களைக் கடந்த எனக்கு, ஒரு ஆணாக என்னைக் கடக்க இயலாதிருந்த அவனைக் கண்டுகொண்டிருக்க மாட்டேன் அன்று.

உலகில் நாம் நினைவில் கொள்ளமுடியாத இரண்டு தருணங்கள் உண்டு. பிறப்பின் முதல் அழுகை, இறப்பின் கடைசி சிரிப்பு. நம் வாழ்வில் சந்திக்கின்ற முதல் மற்றும் இறுதி தருணங்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியாததற்குக் காரணம் உண்டு.

இந்த உலகில் பிறந்த முதல் நிமிடம், நினைவிற்கொள்ளும் ஆற்றல் உயிரிடம் இருக்காது. இந்த உலகை விட்டுப் பிரியும் அந்த நிமிடம் நினைவிற்கொள்ளும் ஆற்றல் இருப்பினும் உயிர் இருக்காது. 

இந்தப் பேருந்து வாழ்க்கையில்தான்  எத்தனை எத்தனை மனிதர்களை எத்தனை எத்தனை முறை எத்தனை எத்தனை இடங்களில் சந்தித்திருக்கிறேன். அத்தனை பேருக்கும் நான் யாரோ ஒருவராகவே கடந்துபோய் இருக்கிறேன். 

பக்கத்து இருக்கை பேருந்து பயணி போல கடந்து போகும் மனிதர்களில் ஒருவராகவே அவன் அன்றிருந்தான். ஓரிரு முறை நான் செல்லும் அதே பேருந்தில் அவன் பயணித்ததைப் பார்த்திருக்கிறேன். ஒரு நாள் பெயர் கேட்டான், ஒரு நாள் படிப்பு கேட்டான், ஒரு நாள் அலைபேசி எண்ணையே கேட்டுவிட்டான், ஒவ்வொரு முறையும் கேட்பதற்குக் கூச்சப்பட்டிருக்கான் என நினைத்துக்கொண்டு, ஏனென்று கேட்காமல் கொடுத்துவிட்டேன் எண்ணை மட்டும்.

ஆதார் கொடுத்தால் மட்டுமே கிடைக்கும் அரச சேவை போல, இவனுங்களுக்கு எண் கொடுத்தால்தான் பெண்களிடம் பேசுவதற்கு மனமே வருகிறது.

அவன் பேச நான் காத்துக் கொண்டிருக்கவில்லை.  அவன் பேசியதும் தான் காத்துக்கொண்டிருந்தேன். அவனது பொறுமையை சோதனையிடும் தராசாக நான் ஆன்லைனில் கழிக்கும் நேரங்கள் இருந்தன. அவன் கோபத்தின் உச்சிக்கு செல்லுமளவு அவனை ஒதுக்கியிருக்கிறேன்.

ஒருகட்டத்தில் வேறொரு பயணியின் எண் வாங்கி அங்கே பேசிக்கொண்டிருப்பானோ? என்றெல்லாம் தோன்றும். அப்படி வேறொருவரிடம் பேசும் ஒருவனிடம் நாம் நட்பு கொண்டாடி என்ன கிழிச்சிடப்போறோம் என்று விட்டுவிட்டேன்.

ஆனால், அவன் பேசியில் என்னைத் தவிர சில நரைவிழுந்த பெண்களின் எண்கள் இருந்தன என்பதை அவன் சேமித்து வைத்திருந்த பெயர்களால் பின்னாட்களில் அறிய முடிந்தது.

ஒருவேளை அந்தப் பழங்காலத்துப் பெயர்களெல்லாம் இளைய கன்னிகளுக்கு அவன்சூட்டிய புனைப்பெயர்களாக இருந்திருக்கலாமோ என நீங்கள் சந்தேகிக்கலாம். நீங்கள் அவன் மீது சந்தேகப்படுவதற்கு ஒரே காரணம் உண்டு. அது, நீங்கள் அவனுடன் பழகாதது தான்.

அவன் மீது எனக்குச் சந்தேகம் வந்ததில்லை. வந்தாலும் ஆச்சரியப்படுதற்கில்லாத மனிதப் பிறவிதான் நானும். அவனுக்கு வாட்சப்பில் விடையளிக்காது போனாலும், அவனிடம் பேருந்தில் எப்போதாவது பேசுவது தொடர்ந்தது.

ஒருமுறை பர்சை வைத்துவிட்டுப் போன எனக்கு, பயணச்சீட்டு எடுக்கப் பணம் தந்தான் எனப்பொய் சொல்லமாட்டேன். அவனை சட்டையே செய்யாத எனது "பர்சு காணாமல் போயிடுச்சின்னு" பேருந்தையே நிறுத்தி எல்லாரையும்  அதோகதி ஆக்கிட்டான். பர்சை தொலைக்குமளவு கவனக்குறைவான நாகரீகமானவள் நானல்ல என்பதையும், வீட்டுலயே வச்சிட்டு வரும் நவநாகரீகமானவள் நானென்பதையும் அவன் அறிந்திருந்தான்.

அன்றைக்குக் கூட அவனுக்கு ஒரு ரிப்ளை பண்ணவில்லை! பாவம் அவன்!!! காத்துக்கொண்டே இருந்திருப்பான் போலும்!! பின்னாட்களில் தன் காத்திருப்பை சொல்லிச் சொல்லி வருத்தமடைவான். பஷீரின் காதல் கடிதத்தில் கேசவன் நாயர் குறிப்பிடும் பெண் போலவே அலைய விட்டிருக்கிறேனாம்.

என் பிறந்தநாளுக்கு அவன் கொடுத்த அந்த நாவலை இன்னும் நான் படிக்கவில்லை என கோவம் அவனுக்கு. இருக்காதா?? நான் தான் அன்பை அடையாளம் காணாத கொடுமைக்காரியாயிற்றே!!!

இந்தக் காலத்துப் பெண்களின் மனநிலையை அறிய முடியாத அந்த காலத்து ஆணாகவே அவனிருந்தான். ஆனால், அந்தக் காலத்து ஆணாகிய அவனது மனத்தை அறிந்துகொள்ளும் இந்தக் காலத்துப் பெண்ணாக நானிருந்தேன் என்பதால், நட்பு பாலைவனத்தில் மலர்ந்த பூவாகவே இருந்தது.

அவ்வப்போது, நானும் அவனும் சண்டை போட்டுக்கொள்வதுண்டு. அப்போதெல்லாம் தமிழகத்தில் தாமரை மலராது என்பதுபோல மீண்டும் எங்கள் நட்பு துளிர்க்காதென நினைப்போம், பின் பரஸ்பரம், சண்டையிடும் அன்றிலிருந்து எங்களின் இறப்பு வரையிலான ஒவ்வொரு சடங்கிற்கும் வாழ்த்து சொல்லி வசை பாடி நிறைவு செய்வோம்.

பத்துநாட்கள் அதிக பட்சம் பேசாதிருந்திருக்கிறோம். அதுவும் கூட அவனால்தான். திடீரென பிச்சைக்காரனைப் போல ஆன்லைனில் எல்லாவற்றையும் இழந்தவனாக, வாட்சப்பிற்கு விடுப்புகொடுத்து,  ஆஃப்லைன் சென்றிடுவான். அவன் வரும்வரை நான் காத்துக்கொண்டிருப்பதுண்டு. அவனிடம் பேச அல்ல! சண்டை இட. 

சில நொடிகள், சில நிமிடங்கள், சில மணிநேரங்கள், சில நாட்கள் என நீளும் சண்டைகளின் நிறைவில் அவனெழுதிய சமாதான உடன்படிக்கையில்  சிரிப்பு ஸ்மைலிக்கள் அனுப்பி நான் கையெழுத்திடுவேன். இது பொய், கையெழுத்திடும் அளவு அவன் சமாதானம் செய்வான். இது மெய்.


மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் சண்டை போட்டிருக்கிறோம் நாங்கள்.  சண்டை என்பது சமாதானத்திற்கும் சமாதானம் என்பது சண்டைக்கும் அடித்தளமாக இருந்திருக்கிறது ஒவ்வொரு முறையும்.

நீங்கள் கூட பார்த்திருக்கலாமே! எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் என் டிபி அவனுடன் சண்டைபோடும் தருணங்களிலெல்லாம் ரிமூவ் செய்யப்பட்டிருக்கும். ஒருவேளை உங்கள் நண்பீக்களின் டிபி ரிமூவ் செய்யப்பட்டிருந்தால், அவள் சண்டைபோட்டிருக்கிறாள் என்றறிந்து கொள்ளுங்கள்.

சிரிப்பு தான் வருகிறது! ஆனால், முதல்முறை அவனை ப்ளாக் செய்தபோது, அவனைக் காட்டிலும் நான்தான் வருத்தமுற்றேன். கஷ்டப்பட்டேன். அழுதேன். ஐந்து நிமிடங்கள் கூட ஆகவில்லை அவனை அன்ப்ளாக் (அன்பால் லாக்) செய்ய. 

அவனைப் பாவமாகவே பார்க்கிறேன் எப்போதும். அதான் அவனுடைய வெற்றியும் அதனால் கிடைத்த என் மகிழ்ச்சியும் கூட. 
என் எல்லாமறிந்த பின், அவன் இன்னும் என்னிடம் பேசிக்கொண்டிருக்கிறான். இறந்தகாலத்தின் எல்லா நிகழ்வுகளையும் பேசித் தீர்த்துவிட்டோம். பேச ஏதுமில்லையென என் பிள்ளைக்குப் பெயர் வைப்பதும், என் பேத்திக்குத் திருமணம் நடத்துவதுமென நீளும் எங்களின் பேச்சு.

காலத்தின் அருமையை இழத்தலால்,  மீட்டுருவாக்க முடியாது, என்னுடைய அன்றாடத்தை, என் கனவுகளை, என் மனதின் அடி ஆழத்தில் இருக்கக்கூடிய நினைவுகளைச் சுமந்து சென்ற அவன் சிறகுகள் என் வானத்தில் இன்னும் உலவிக் கொண்டிருக்கின்றன.

அவனை ஏன் சந்தித்தேன், ஏன் பேசினேன், ஏன் சண்டையிட்டேன், என ஒவ்வொன்றையும் தூக்கம் வராத இரவுகளில் நினைப்பதுண்டு. என் ஒவ்வொரு இரவையும் அவன் துதி பாடி நிறைவு செய்வான். அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே நான் தூங்கிவிடுவதும், அவன் காலையில் உறங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் நானெழுவதுமென முரணாகச் செல்கின்றன கடந்தகாலங்கள்.

ஒருநாள் இதுதான் தன்னுடைய இறுதிப்பயணம் எனச்சொல்லி இறங்கிவிட்டான். அவன் எதில் தான் உறுதியாயிருந்திருக்கிறான். இறுதி என்பதும் அவனுக்கொரு மறதி என இருந்துவிட்டேன்......

ஆனால், அவனை அதன்பின் நான் பேருந்தில் பார்ப்பதேயில்லை. வாட்சப்பில் அவனுடைய வரவிற்காக நான் காத்துக்கொண்டிருப்பதும் உண்டு. தன்னுடைய நேரமின்மையை அவன் சாரி எனும் ஒற்றைச் சொல்லில் சரிகட்டிவிடுவான். அதற்கு மேல் சண்டையிட்டால் அதைச்சமாதானம் செய்யவே நேரம் போய்விடுமென இப்போதெல்லாம் அவன் சண்டைக்குத் தூது அனுப்பினாலும், அதைத் திரும்பிக்கூட பார்ப்பதில்லை.

அவன் பேசுவது குறைந்துவிட்டது. அவன் எங்கோ இருக்கிறானாம்.  ஆனால், அவனுடன் சண்டையிடுவதை நிறுத்தியதைப்போல, இன்னும் பேருந்தில் பயணம் செய்வதை நிறுத்தவில்லை நான். எதற்காக நான் நிறுத்தவேண்டும்?  

என்னுடைய பயணத்தை நான் தானே மேற்கொள்ள வேண்டும்! என் வாழ்க்கை வேருக்கு நான் நீரூற்றியாக வேண்டும்.

எனக்கு ஒரே ஒரு உதவி மட்டும் செய்யுங்கள்,

நான் சொன்ன அடையாளத்துடன் அவனை எங்காவது நீங்கள் பார்த்தால், அவனிடம் மறவாமல் சொல்லுங்கள்.....

அவள் சண்டையிட பயணித்துக்கொண்டிருக்கிறாள் என்று..!



--------------------------------
த.க.தமிழ் பாரதன்
புதுதில்லி
21.10.2018
https://www.facebook.com/butterbharathan

வெள்ளி, 14 செப்டம்பர், 2018

  புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்சங்க தேர்தல் தொடங்கியது.

மக்களாட்சி நடைபெறும் இந்தியாவில் தேர்தல் என்றாலே கொண்டாட்டம் தான் அரசியல் கட்சிகளுக்கு,. தேர்தலில் களம்காண்பவர்களும், அதில் வெல்பவர்களும் ஜனநாயகத்துடன் நடந்துகொள்கிறார்களா! தேர்தல் கூட ஜனநாயக முறைப்படி நடக்கிறதா? என்பதெல்லாம் விடை தேடப்படவேண்டிய வினாக்கள்.  தாம் அன்றாடம் எதிர்கொள்கிற திண்டாட்டத்தை ஒழித்து நல்லது நடக்கும் என்று ஒவ்வொரு முறையும் வாக்களிப்பதே சராசரி இந்திய மனம்.

மாணவர்கள் தான் எதிர்காலம் என்றான பிறகு, மாணவர்களிடையே அரசியல் குறித்த விழிப்புணர்வென்பது அத்தியாவசியமானதாகும். அரசியல் கட்சிகளின் மாணவர் பிரிவுகள் அரசியல் கட்சிகளை விட வேகமாக இயங்குகின்றன எனலாம். இந்நிலையில் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் மாணவர் சங்கத் தேர்தல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது! 

இந்தியாவின் தலைநகரில் இயங்கும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகமானது மற்ற கல்விநிலையங்களைவிட மாறுபட்டது. கருத்துச்சுதந்திரமும் பன்முகத்தன்மையும் இதனை இன்றும் தாங்கியிருக்கின்றன. இங்குள்ள மாணவர்கள் கருத்துச்சுதந்திரத்தையும், போராட்டங்களையும் முன்னெடுத்துச் செல்பவர்களாகவும் இந்தியாவின் பிற மாணவர்களுக்கு முன்னோடிகளாக உள்ளனர். எங்கு உரிமை மீறல் நிகழ்ந்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கே கூட்டம் போராட்டம் நடத்தப்பெறும். 

இவர்களை நெறிப்படுத்தும் இங்குள்ள மாணவர் சங்கத்திற்கான தேர்தல் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இத்தேர்தல் முடிவுகள் அரசியலிலும் கல்விச்சூழலிலும் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 

2018ஆம் ஆண்டிற்கான JNUSU - ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல் இன்று 14.09.2018 காலை 09.30மணியளவில் தொடங்கியது. 
தலைவர், துணைத்தலைவர், பொதுச்செயலாளர், இணைச்செயலாளர், மற்றும் பாடப்பிரிவுகளுக்கான கவுன்சிலர்கள்  ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் வெற்றி அடைபவர்களே மாணவர் பிரதிநிதிகளாவர்.  

கடந்த 12.09.2018 அன்று இரவு விடிய விடிய பல்கலைக்கழக மாணவர்கள் முன்னிலையில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மாணவர்களின் விவாதம் நடைபெற்றது. அமைப்பு ரீதியாக, கொள்கை ரீதியாக மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் விடையளித்தனர். எப்படி பதில் சொல்கிறார், அவரது சித்தாந்தம் என்ன!  கொள்கை, திறன் , இலக்கு என்ன! என்பதெல்லாம் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒரே மேடையில் விவாதிப்பதால் அவர்களைத் தேர்வு செய்ய ஏதுவாக இவ்விவாதம் அமைகிறது. 

களத்தில் வெகுவாக இயங்கும் அமைப்புகள் :
பிர்சா அம்பேத்கர் புலே மாணவர் அமைப்பு (Birsa Ambedkar Phule Students Association - BAPSA),
காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கம் (National Students Union of India - NSUI), 
பா.ஜ.க-வின் மாணவ அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிசத் (Akhila Bharatiya Vidyarthi Parsishad - ABVP).
அனைத்திந்திய மாணவர் சங்கம் (All Indian Students Association – AISA), 
இந்திய மாணவர் சங்கம்(Students Federation of India - SFI) ,
ஜனநாயக மாணவர் கூட்டமைப்பு (Democratic Students Federation - DSF)
அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (All India Students Federation )

பல்கலை. வளாகத்துக்குள் காவல்துறை அத்துமீறி நுழைந்து, மாணவர் அமைப்புத் தலைவரைக் கைதுசெய்தது, மாணவர் போராட்டங்களுக்கு அனுமதி மறுத்தல்,  ShutDownJNU,  மாணவர் நஜீப் மீதான தாக்குதலைத் தொடர்ந்து அவர் காணாமல் போனது, போராட்டங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது விசாரணைகள் பல்கலைக்கழகத்தைவிட்டு நீக்குதல், அபராதம் விதித்தல், மாணவர்களின் போராட்டங்களுக்குத் துணையாக இருக்கும் ஆசிரியர்கள் மீதும் விசாரணைகள் போன்றவை காரணமாக எதிர்எதிர் துருவங்களாகச் செயல்பட்டு வந்த மாணவ அமைப்புகளான இடதுசாரி அமைப்புகள் ஒன்றுபட்டுத் தேர்தலைச் சந்திக்கின்றன.

பல்கலைக்கழகத்துக்குள் மாணவர்களின் போராட்டங்கள் மட்டுப்படுத்தப்படுத்தல், மாணவர் சேர்க்கையில் பெரும்பான்மையான இடங்களைக் குறைத்தல், மாணவர்கள் மீதான தாக்குதல்.,  பல்கலைக்கழக நிர்வாகம் ஜனநாயக முறைப்படி நடக்க வேண்டியுள்ளது.  நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலை, உயர்கல்வி காவிமயமாவதையும் தடுக்க வேண்டியுள்ளது. 

அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெறும் மாணவ அமைப்பிற்கான தேர்தல் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. இது நாடாளுமன்றத் தேர்தலிலும் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த ஆண்டு இடதுசாரிகளின் ஒருங்கிணைந்த கூட்டணி [AISA - DSF - SFI - AISF] சார்பில் சாய்பாலாஜி, ஏபிவிபி[ABVP] சார்பில் லலித் பாண்டே, பாப்சா [BAPSA] சார்பில் தள்ளபள்ளி பிரவீன், என்எஸ்யுஐ [NSUI] சார்பில் விகாஸ்யாதவ், ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த நான்கு போட்டியாளர்களிடையே  கடுமையான போட்டி நிலவுகின்றது.

இம்மாணவர் சங்கத் தேர்தல் முடிவுகள் ஜனநாயகமானத்திற்கும் மாணவர்களின் செயல்பாட்டுக்கும் வலுச்சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான அடித்தளமாகவும் அமைகிறது. 

அரசியல் தளத்திலும் கல்விச் சூழலிலும் கவனிக்கப்படும் தேர்தலின் முடிவுகளை வரும் ஞாயிறு 16.09.2018 அன்று தெரிந்துகொள்ளலாம்.

(சிறப்பு நிருபர் - தில்லி)
14.09.2018

கடல் கடந்தும் கலைஞருக்கு அஞ்சலி!

தமிழகத்தின் முன்னாள் முதல்வராகவும் திமுகவின் அரைநூற்றாண்டு கால தலைவருமாகவும் இருந்த கலைஞர். மு.கருணாநிதி கடந்த செவ்வாய்க்கிழமை (07.08.2018) மாலை  உடல்நலக் குறைவின் காரணமாக மறைந்தார். 08.08.2018 அன்று ஒரு சூரியன் மேற்கில் மறைந்துபோனது, இன்னொரு சூரியன் கிழக்கில் மெரினா கடற்கரையில் விதைந்துபோனது.


கலைஞர் மறைவிற்கு தமிழகம் உட்பட தென் மாநிலங்கள் அரசு துக்கம் அனுசரித்தன. இந்திய அரசாங்கம் ஒருநாள் துக்கம் அனுசரித்தது. கலைஞரின் மறைவு அரசியலில் மாபெரும் வெற்றிடத்தை உருவாக்கியதைப் போல மக்களிடமும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

கலைஞர் கருணாநிதிக்கு! தமிழகம், இந்தியா தாண்டி கடல் கடந்து வாழும் தமிழர்கள் இரங்கற்கூட்டம் நடத்தி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் இரங்கல் கூட்டம் நடந்தது. இதில் அமீரக தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் பலரும் பங்கேற்க  அய்மான் சங்க ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு அய்மான் பைத்துல்மால் தலைவர் அதிரை  ஷாஹுல் ஹமீது  தலைமை வகித்தார்.

கலைஞரின் சிறப்புகளையும் அவர்தம் மக்கட்தொண்டையும் பல்வேறு நபர்கள் சிறப்பித்துப் பேசினர்.

ஒரு நிமிடம் அனைவரும் மவுன அஞ்சலி செலுத்திய பின் கூட்டம் நிறைவுபெற்றது. கலைஞரின் பணிகளையும் தொண்டுகளையும்  பாராட்டி மத்தியஅரசு  பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என  இரங்கல் கூட்டத்தில் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

இதேபோல், ஆஸ்திரேலிய நாட்டில் சிட்னி நகரில் இயங்கிவரும் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் சார்பில் கலைஞருக்கு இரங்கற் கூட்டம் நடைபெற்றது!

இதில் சிட்னி வாழ் தமிழர்கள் பங்கு கொண்டு கலைஞரின் நினைவுகளையும் அவருடைய பணிகளையும் பேசினர். அவரது திருவுருவப் படத்திற்கு மாலை சூட்டி மரியாதை செய்தனர்., இது குறித்து  சிட்னி வாழ் தமிழர் அனகன் பாபு கூறுகையில், கலைஞர் கருணாநிதி தமிழுக்கும் தமிழர்க்கும் அரசியல் கடந்து பணியாற்றியவர். அவரது சாதனைகள் போற்றுதர்க்குரியது என்றார்.

இதேபோல் இந்தியத் தலைநகர் தில்லியில் அம்பேத்கார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலைஞர் கருணாநிதி ஆற்றிய சமூக நீதிப் பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தில்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுகுமார் மற்றும் அம்பேத்கார் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ராஜம் கிருஷ்ணன் இரு பேராசிரியர்களும் உரையாற்றினர்.  இந்திய திராவிட அரசியலில் கருணாநிதியின் பங்கு எனும் தலைப்பிலான விவாதக்களத்தில் வடமாநில மாணவர்களும் பங்கு கொண்டனர். மாணவர்களின் கேள்விகள் பாங்குற அமைய, மாணவர்களும் தங்கள் கருத்துகள் எடுத்துரைத்தனர்.

புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்  மாணவர் கூடும் இடங்களில் இந்திய அரசியலில் கலைஞர் கருணாநிதியின்  இரங்கல் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. இதனை தில்லி தமிழ் மாணவர் படிப்பு வட்டத்தின் சார்பில் ஒட்டப்பட்டதாக தமிழாய்வு மாணவர் அருண்குமார் தெரிவித்தார்.

இவ்வாறு தமிழகத்தில் வாழ்ந்த கலைஞர் கருணாநிதிக்கு மாநிலங்கடந்தும், கடல்கடந்தும் இரங்கற்கூட்டம் நடத்தியிருப்பது மக்கள் மத்தியில் அவர்தம் சிறப்புக்குச் சான்றாகிறது!

த.க.தமிழ்பாரதன்
12.08.2018

புதன், 29 ஆகஸ்ட், 2018

Foreign Scholarships for students

Please check the Scholarships

1. Australia Award  Scholarship (http://australiaawardsindo.or.id)



3. DIKTI Scholarship a. Dalam Negeri (http://www.beasiswa.dikti.go.id/dn/)b. Luar Negeri (http://beasiswa.dikti.go.id/ln/)


4. Turkey Government Scholarship (http://www.turkiyeburslari.gov.tr/index.php/en)


5. General Cultural Scholarship India (http://www.iccrindia.net/gereralscheme.html)


6. USA Government Scholarship a. (http://www.aminef.or.id/index.php)b. (http://www.iief.or.id)


7. Netherland Government Scholarship (http://www.nesoindonesia.or.id/beasiswa)


8. Korean Government Scholarship (http://www.niied.go.kr/eng/contents.do…)


9. Belgium Government Scholarship (http://www.vliruos.be/4273.aspx)


10. Israel ... ... xxx


11. Sciences Po France (http://formation.sciences-po.fr/…/the-emile-boutmy-scholars…)


12. Utrecht University Netherland (http://www.uu.nl/…/grantsandscholarships/Pages/utrechtexcel…)


13. Prasetya Mulya Business School Indonesia (http://www.pmbs.ac.id/s2/scholarship.php?lang=ENG)


14. Brunei Darussalam Government Scholarship (http://www.mofat.gov.bn/index.php/announcement)


15. Monbugakusho Scholarship Japan (http://www.id.emb-japan.go.jp/sch.html)


16. Paramadin ba University Master Fellowship Indonesia (https://gradschool.paramadina.ac.id/…/paramadina-medco-fell…)


17. PPM School of Management Indonesia (http://ppm-manajemen.ac.id/beasiswa-penuh-s2-mm-reguler/)


18. University of Twente Netherland (http://www.utwente.nl/internationa…/scholarshipsandgrants/…/)


19. Sweden Government Scholarship (http://www.studyinsweden.se/Scholarships/)


20. Chinese Government Scholarship (http://www.csc.edu.cn/laihua/scholarshipdetailen.aspx…)


21. Taiwan Government Scholarship (http://www.studyintaiwan.org/taiwan_scholarships.html)


22. United Kingdom Government SCholarship (http://www.chevening.org/indonesia/)


23. Panasonic Scholarship Japan (http://panasonic.net/citizensh…/scholarships/…/requirements/)


24. Ancora Foundation Scholarship (http://ancorafoundation.com)


25. Asian Public Intellectuals Fellowship Japan (http://www.api-fellowships.org/body/)


26. AUN/SEED-Net Scholarship (http://www.seed-net.org/index.php)


27. Art Asia Major Scholarship Korea National University of Arts (http://eng.karts.ac.kr:81/karts/board/list.jsp…)


28. Ritsumeikan Asia Pacific University Japan (http://www.apu.ac.jp/home/life/index.php?content_i


d=30)


29. Seoul National University Korea (http://en.snu.ac.kr/…/gradu…/scholarships/before-application)


30. DIKTIS Overseas Scholarship (http://www.pendis.kemenag.go.id/beasiswaln/)


31. Honjo International Scholarship Foundation Japan (http://hisf.or.jp/english/sch-f/)


32. IDB Merit Scholarship Programme for High Technology (http://www.isdb.org/irj/portal/anonymous…)


33. International HIV & Drug Use Fellowship USA (http://www.iasociety.org/fellowship.aspx)


34. Nitori International Scholarship Foundation Japan (http://www.nitori-shougakuzaidan.com/en/)


35. School of Government and Public Policy Indonesia (http://sgpp.ac.id/pages/financial-conditions)


36. Inpex Scholarship Foundation Japan 



38. Macquaire University Australia (http://www.mq.edu.au/…/macquarie_university_international_…/ . 

வெள்ளி, 22 ஜூன், 2018

நடிகர் விஜய் வென்றதும், வெல்ல வேண்டியதும்…


நடிகர் விஜய் வென்றதும், வெல்ல வேண்டியதும்…

#பிறந்தநாள்_பதிவு #விஜய் #நடிகர்

விஜய் வெற்றி பெற்ற பயணம்

      நடிகர் விஜய்யின் கரியரை கவனித்திருக்கிறீர்களாகடந்த 20 வருடங்களாக விஜயின் கரியரை பார்த்ததில் ஒரு விஷயத்தை கவனித்தேன். விஜய் பாக்ஸ் ஆபிஸீல் கில்லியாக இருக்க அவர் ஆன் ஸ்க்ரீன் மட்டுமே காரணமில்லை. பல புறக்காரணிகளும் உண்டு. அதில் முக்கியமானது திட்டமிடல்.

2000க்கு பிறகு ஒவ்வொரு ஆண்டும் அவர் நடித்த படங்களின் எண்ணிக்கை இது
2000 – 3
2001 – 3
2002 – 3
2003 – 3
2004 – 3
2005 – 3  ( பந்தயமெல்லாம் சேர்க்கவில்லை)
இது விஜய் வேகமாக வளர்ந்த காலம். அவரது போட்டியாளராக அப்போது உருவாகியிருந்த அஜித்சூர்யாவிக்ரம் யாருக்குமே இந்த மாதிரி அமையவில்லை. அல்லதுஅவர்கள் அபப்டி திட்டமிடவில்லை. ஒரு கமர்ஷியல் ஹீரோவுக்கு இது மிக அவசியம் என நினைக்கிறேன். ஆண்டுக்கு படங்கள் தோல்வியானால் கூட ஒரு படம் காப்பாற்றிவிடும். அப்படித்தான் இந்தப் படிட்யலில் குஷி,  ஃப்ரெந்ஸ்யூத்,   திருமலைகில்லிதிருப்பாச்சி எல்லாம் விஜயை வளர்த்தன. சென்ற ஆண்டுக்கு கூட பைரவா என்ற தோல்வியை மெர்சல் மேஜிக் மறக்க வைத்ததை கவனிக்கலாம்.
mersal movie scene
ஆனால்அதே சமயம் வளர்ந்த பிறகும் ஆண்டுக்கு மூன்று படங்கள் என்பது எதிர்பார்ப்பைக் குறைக்கலாம். 2007ம் ஆண்டு போக்கிரிஅழகிய தமிழ்மகன் என எண்ணிக்கையை இரண்டாக குறைத்தார். அது 2012 வரை தொடர்ந்தது. அதன் பின்இப்போது ஆண்டுக்கு படங்கள் என வெளிவருகின்றன. அதில் ஒன்று பைரவா ஜில்லாவென இருக்கும். விஜயின் படங்கள் எல்லோருக்குமானவை. ஒரு வீட்டிலிருந்து பேர் படம் பார்க்க சென்றால்எல்லோருக்கும் அந்தப் படத்தில் எதாவதொரு விஷயம் இருக்க வேண்டும். போலவே,பி,சி என அனைத்து சென்டர்களுக்கும் படம் எடுக்க வேண்டும். வசூலில் சாதனை செய்த கஜினியை விட சண்டக்கோழிதான் பி&சி ஹிட். அந்த ஏரியாதான் கோலிவுட்டின் மோஸ்ட் வான்ட்டட். அவர்களுக்காக அவ்வப்போது ஒரு படம் விஜய் நடித்தே ஆக வேண்டும்.

இது யதேச்சையாக நடந்ததல்ல. தெளிவான திட்டமிடல். இதுதான் விஜயை இன்று நெம்பர் ஒன் ஆக்கியிருக்கிறது என நினைக்கிறேன்.சினிமாவில் விஜய் எப்போதும் நேரம் தவறாத ஆள் என்பார்கள். அதை சில சமயம் நேரில்(விகடன் அவார்ட்ஸ்) பார்க்கவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இத்தனை மணிக்கு வருகிறேன் என்றால் வந்துவிடுவார். அதுமட்டுமில்லாமல்எல்லா விஷயங்களிலும் விஜயின் திட்டமிடல் பக்காவாக இருக்கும். அது அனிதாவை பார்க்க போவதென்றாலும் சரிஅழகிய தமிழ் மகன் பட ரிலீஸ் என்றாலும் சரி. பணம் விளையாடும் சினிமா துறையில் வசூல் சக்ர்வர்த்தியாக இருக்க ஆன் ஸ்க்ரீன் திறமை மட்டுமே போதாது. அது விஜய்க்கு நன்றாக தெரிந்திருக்கிறது. (மேற்கண்ட தரவு கார்க்கி பவா அண்ணன் முகநூலில் எழுதியது)

விஜய் வெல்ல வேண்டிய பயணம்

கிட்டத்தட்ட இடைநிலைக்கல்வி பயின்றுகொண்டிருந்த காலம் அது. அப்போதெல்லாம் பள்ளிக்கூடத்தில் வழிபாட்டுக்கூட்டம் தினமும் நடக்கும். அதில் செய்தி வாசிப்பதற்காக தினசரி வீட்டிற்கு ஆஜராகும் தினமணியை வாசிப்பது வழக்கம்.

முதற் பக்கத்தில் அச்சான செய்தி முதலாவதாக வரும். நடுவே உள்ளூர்ச் செய்திகள். நிறைவுச்செய்தியாக விளையாட்டுச் செய்தி வரும்.  தினமணியின் நிறைவுப் பக்கத்தில் விநோதச் செய்திகளும், முக்கியச் செய்திகள் சிலவும் இடம் பெறும்.

      அப்படித்தான், அப்போதைய மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ் பல அறிவிக்கைகளைச் செய்திருந்தார். நடிகர்களை பலர் முன்மாதிரிகளாக வைத்துக்கொள்கிற காரணத்தால், திரைப்படங்கள் தாக்கத்தை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதனால், திரைப்படங்களில் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க வேண்டாமென கேட்டுக்கொண்டார்.

      அப்போது நடிகர் விஜய் மட்டுமே, என் படங்களில் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெறாதென அறிவித்தார். அதனை பள்ளிக்கூடத்தில் வாசித்த நினைவு இன்றுமுள்ளது. சில செய்திகள் காலம் கடந்தாலும், மாறதவை, மறையாதவை. மறையக்கூடாதவை.

      அந்த வயதில் தோன்றியதென்னவோ, ஏன் பிற நடிகர்கள் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை? குடிப்பது போன்ற காட்சிகள் மட்டும் சரியானதா என்ன? போன்ற கேள்விகளே. ஆனால், வளர வளர சினிமா என்பதன் வடிவமும், வர்த்தகமும் புலனாக ஆரம்பித்தது. நடிகர்கள் பேசுவதெல்லாம் வசனங்கள், யாரோ எழுத, எல்லாரிடத்திலும் கொண்டு சேர்க்கும் கருவி நடிகர் என்பதெல்லாம் பின்னர் அறியலாயிற்று,.

anbumani ramadoss tweet about vijay's sarkaar movie first look
சில நடிகர்கள் திரையில் தான் புகை பிடிப்பார்கள், அன்றாட வாழ்வில் அப்படியில்லை. ஆனால்,  திரையில் மட்டுமின்றி நடைமுறையில் முற்போக்கு பேசும் நபர்கள் கூட புகைப்பழக்கம், குடிப்பழக்கத்திற்கு அடிமையாவது கண்கூடு. (இவர்கள் அன்றாடம் புகைபிடிப்பவர்கள், திரையில் புகை பிடிக்காதவர்கள் ! )

21.06.2018 அன்று நடிகர் விஜய்யின் 62ஆவதுபடத்தின் ஃப்ர்ஸ்ட்லுக் வெளிவந்ததும், பெரும்பான்மையோரின் வாட்ஸப் நிலைத்தரவும் அப்படத்தால் நிறைந்திருந்தன. அவர் புகைபிடிப்பது போன்ற காட்சியை விமர்சித்திருந்தனர் சிலர். புகைப்பிடிக்கமாட்டேன் என விஜய் சொன்னதாக வெளிவந்த தினத்தந்தி செய்தியை பதிவேற்றியிருந்தனர்.

ஆனால், மெர்சல் படத்தில் மேஜிசியன் விஜய்யை அடையாளப்படுத்த வேண்டுமென்று சிகரெட் புகைக்க வைத்திருப்பார் இயக்குநர். கையில் உருண்டை சுற்றும் காட்சியோடு நிறுத்தி இருந்தாலே, அவர் மருத்துவர் விஜய்யிடமிருந்து தனித்து தெரிந்திருப்பார். (இதில் உள்ள சிக்கல் என்னவெனில், கையில் உருண்டை சுற்றும் காட்சி பைரவா படத்தில் கையில் காசு சுற்றும் காட்சியின் நகல் என்று சொல்ல வாய்ப்பிருப்பதால் சிகரெட் கூடுதல் தனித்துவமாக காட்டப்பட்டுள்ளது என்பது என் கணிப்பு)  

கோகோ கோலா சோடா விளம்பரத்தில் நடித்தவரே, கத்தி படத்தில் ‘கோலா’ கம்பெனியை விமர்சித்திருப்பார். காலப்போக்கில் தன் கடந்தகாலத்தை திரைமொழியால் மாற்றியிருக்கிறார் என்ற நேர்மறை வரவேற்பு இருந்தது. ஆனால், இப்போது கடந்தகாலத்தில் கொடுத்த வாக்கை திரைமொழியால் மீறியிருக்கிறார் என்ற எதிர்மறை வசைபாடல் இருக்கிறது.

ஜல்லிக்கட்டு களத்திலும், தூத்துக்குடிக்கு ஆறுதல் சொன்ன இரவிலும் அமைதியாக சமூக வெளியில் களமிறங்குவது பாராட்டுதற்குரியது. தனக்கான அடையாளங்களை வெள்ளித்திரையிலும், வெளித் திரையிலும் ஏற்படுத்திவரும் நடிகர் விஜய் இவற்றை கவனத்தில் கொள்வது, மேலான வளர்ச்சிக்கு உதவுமென்பது கண்கூடு.

https://youtu.be/iMNtkyn8dNQ

-த.க.தமிழ்பாரதன்22.06.2018


வியாழன், 17 மே, 2018

துயிலாத நினைவுகள் | கவிதை | அன்னையர் தினம்


துயிலாத நினைவுகள்




தேனாய் ! தெளிந்தேனா !

தமிழ்த்தேனாய் இனித்தேனா !

 

இருந்தேனா எனத் தெரியவில்லை

உயிர்ப்பிழைத்தேனா என்பதறியவில்லை...

 

காதிருந்தும் கேட்கவில்லை,

வாயிருந்தும் உண்ணவில்லை...

 

என் புவியில் நான் மட்டும்

கால் எடுத்து வைத்தால் வான்முட்டும்

 

கால்நீட்டிச் சண்டையிட்டால்

காதிரண்டும் கேடயமாம்

 

பேசக்கூட யாருமில்லை; பேச கூட யாருமில்லை

பேசத்தடை ஏதுமில்லை

 

உடுத்த ஆடை ஒன்றுமில்லை

படுத்து றங்க பாயுமில்லை

 

இருட்டிலே கழிந்தன பகல்கள்

எப்படியோ கடத்தினேன் போங்கள்

 

இரைப் பையடக்கி தலைப்பை யடக்கி

என்னுயிரும் இருந்தது

 

கையடக்கி காலடக்கி பல

நாளடங்கிச் சென்றது

 

விழியிரண்டும் விரதம்தான்

விழிதிறக்கையில் உலகம்தான்

 

 

அழுதுகொண்டே பிறந்தேனாம்

ஆளநானும் அவதரித்தேனாம்

 

கருவறைச் சிறைவாசம்தான்

கடுகளவும் நினைவில்லை

 

ம்ஹூம்இவை

அம்மா சொன்னதாய் நினைவுகள்

அவள் கண்ணுறக்கம் கலைத்த பொழுதுகள்

 

அவள் துயிலாத பொழுதுகளே

என் துயிலாத நினைவுகள்....


<3 p="">
<3 p="">-த.க.தமிழ் பாரதன்
<3 p="">(அனைத்துக் கல்லூரிகளுக்கிடையிலான கவிதைப் போட்டியில் பரிசு வென்ற கவிதை ) நாள் : 25.02.2018 | இடம் : அதிராம்பட்டினம்