நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

வெள்ளி, 31 ஜூலை, 2015

உயிர் பிரிந்த கலாமின் உணர்வுகளை மெய்பிப்போம்.

உயிர் பிரிந்த கலாமின் உணர்வுகளை மெய்பிப்போம்.

எல்லாரின் பிறப்புகளையும் இறப்புக்குள் அடக்கி விட முடியாது என்ற முன்னோடி கருத்துக்கு அப்துல் கலாமே சான்று. நான் முன்னெடுத்த ஆட்சி, அதிகாரம், பணம், புகழ், செல்வாக்கு, பெருமை, அரசியல் என்ற கோட்பாடுகளில் பலவற்றை தன்னிறைவோடு பெற்ற ஓரே நபர். அதைத் தாண்டி சிலவற்றையும் எனக்கு கற்பிதங்களாக தந்தவர் அப்துல் கலாம் மட்டுமே.

காலத்தின் கட்டாயத்தில் மறைந்திருக்கின்றார் என்றால், கலாமின் கட்டாயத்தில் பல கோடி பேர் நன்மக்களாக உருவாகி இருக்கின்றனர் என்பது மெய். நான் உலகை உணர ஆரம்பித்த நொடியில் எனக்கு அறிமுகப் படுத்தப் பட்ட அணு ஆயுதம், அறிவாயுதம், அப்துல் கலாம். காந்தி, கக்கன், காமராஜர் என நம் முன்னோடி முன்னோர்கள் வாழ்ந்த இறந்தகாலத்தில் வாழ முடியாத சூழலில், நம் நிகழ்காலத்தில் வாழ்ந்த முன்னோடி அப்துல் கலாம்.

இவரைப் போல இவன் உருவாக வேண்டும் என்றே ஆசிரியர்களும், அன்னை தந்தையும் ஆசைப்பட்டனர். ஆனால், நான் நானாகவே பிரசவிக்கப்படேன், நானாகவே தான் உருவானேன். ஆனால், பலரின் தாக்கங்கள் என்னுள் விதைத்துக்கொண்டேன். அந்தத் தாக்கத்தில் இறுதி வரை “இவர் தான் அப்துல் கலாம்” எனும் என்னுடைய வரையறைக்குள் வராது நின்றவர் தான் கலாம்.

தன்னுடைய வாழ்நாளில் எல்லாருக்காகவும் ஓடி உழைத்த பெருமை,
அதன் பலனை இந்தியாவுக்கு கொடுத்த பெருமை
திருமகன் அப்துல் கலாமையே சாரும்.

என்னுடைய வாழ்நாளில் நான் எப்படியும் அப்துல் கலாமோடு நின்று படம் எடுத்துக் கொள்வேன் என்று நினைத்திருந்தேன். ஆனால், அதற்கு கலாமின் வாழ்நாள் ஒத்துழைக்க வில்லை. இருப்பினும் அவரை நேரில் பார்க்கும் பேறு கிடைத்தது கவிஞர் வைரமுத்துவினால் தான். கவிஞரின் மணி விழா நிகழ்விற்கு பரிசு வாங்க சென்ற போது அப்துல் கலாமின் உரையையும் அவரது திருஉருவத்தையும் காண முடிந்தது. அந்தக் கணங்கள் தான் நீங்கள் இங்கு பார்க்கும் படங்கள்.

அவர் கூறிய எத்தனையோ குறிக்கோள்கள் நிறைவேறியும், நிறைவேற காத்துக் கொண்டும் இருக்கின்றன. அவரை மதித்த மக்கள் அவருக்காக செய்ய வேண்டிய செயல்கள் எவ்வளவோ இருக்கின்றன. ஆனால், அது குறித்து பேசவே மறுக்கும் மக்களால் எப்படி செயல்படுத்த முடியும். நேற்று (29.௦7.2௦15) உள்ளூர் தொலைக்காட்சியில் கருத்துப் பரிமாற்றம் நிகழ்வில் கலந்து கொண்டேன். ஒரு மணி நேரத்தில் அப்துல்கலாம் பற்றிய கருத்துகளை பகிர்வதற்கு இரண்டு பேர் தான் முன்வந்தனர். ஒரு மணி நேர நிகழ்வில் 2 மட்டுமே பேசுதல் என்பது சாதாரண நடிகன், நீங்கள் கேட்டவை, பிறந்தநாள் வாழ்த்து போன்றவற்றில் நிகழாது ஒன்று.

இது ஒரு உதாரணம். இவை போன்ற குறைபாடுகள் எண்ணற்ற அளவில் பாடுபொருளாக இருக்கின்ற இந்தியாவை தான் 2௦2௦ல் வல்லரசாக்க விரும்பினார் கலாம். அந்த எண்ணத்தை ஈடேற்ற “ ஒவ்வொரு உண்மை இளைஞன் பலருக்கு இணையாக பாடுபட வேண்டி இருக்கும்”.

இவையெல்லாம் “நிச்சயம் ஒரு நாள் விடியும்., அது நம்மால் மட்டுமே முடியும்”, என்கின்ற எண்ணத்தில் களத்தில் இறங்கத் தயாராகி விட்டோம். எதைப் பாடுபொருளாகக் கொண்டு என்னை சீர்படுத்துவது என்றிருந்தேன். அந்த முயற்சிக்கு ஒரு உடனடி பாதையை தற்போதைய சூழ்நிலைகள் உருவாக்கி இருக்கின்றன. உருவாக வைத்திருக்கின்றன.

அவரைப் பற்றி பேசுவது மட்டுமல்ல, அவர் விட்டுச் சென்ற செயல்களுக்கு உயிர் வடிவம் கொடுப்பதும் நமக்கு கடைமையாக இருக்கிறது. அவரது கனவோடு சேர்த்து நமது கனவும் மெய்ப்படட்டும்.

சராசரியும் சாதனை ஆகின்றது, அதன் சரித்திரப் பின்னணியில்.....

த.க.தமிழ் பாரதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக