நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

செந்நீர் தியாகங்களுக்கு கண்ணீர் மட்டுமல்ல காணிக்கை.

செந்நீர் தியாகங்களுக்கு கண்ணீர் மட்டுமல்ல காணிக்கை.
இந்த ஆண்டு சுதந்திர தினம் 15.08.2015 சிறப்பாக மனதில் பதிந்தது.
காலை கல்லூரி வளாகத்தில் பேசி முடித்த பின்பு, வீடு வந்து மதியம் உண்ட பின்பு வந்த தொலைகாட்சி நிகழ்வுகள் எல்லாம் கண்களை துடைக்க வைப்பதாகவே இருந்தது.
அதிலும், புதிய தலைமுறையின்
"எல்லை இராணுவத்தோடு" நிகழ்வு பாராட்டுக்குரியது. மறைந்து நிற்கும் இராணுவத்தினரின் உலகில் சென்று பேட்டி எடுத்த ஒவ்வொரு நொடி காணொளியும் வரலாறு.
எந்த ஒரு செயற்கையும் இல்லாமல், எந்த ஒரு பஞ்ச் வசனங்களும் இல்லாமல், இயல்பு வாழ்க்கை நிலைகளை எடுத்துரைத்து கண்களை கண்ணீர் கடலாக்கிய அந்நிகழ்வு ஊடகங்களின் மைல்கல் என்று தான் கூற வேண்டும். அவர்கள் வாழ்க்கையை சொல்லும் போது ஏன் அழுகிறோம் என்று கூடத் தெரியாமல் அழுத பொழுதுகள் அவை.
சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தினங்களில்
போராட்டக்ளங்களில் பயணிப்பதாக உணருகிறேன்.
வெறும் கண்ணீரை மட்டும் காணிக்கையாக்குவதல்ல
நம் கடமை.,
சுதந்திர வேட்கை சுணங்கிய மக்களை சூரர்களாக்கியது. மாய வேட்கையில் இருந்து விடுபடுவோம்.,
சமூகம் காப்போம்.
தேசியம் வளர்ப்போம்.
சுதந்திர தின நல்வாழ்த்துகள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக