நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

ஆசிரியர் தினமும் கோகுலாஷ்டமியும்,

ஆசிரியர் தினமும் கோகுலாஷ்டமியும்,
ஆசிரியர் தினம் : -
சுட்டி விகடனுக்கு அனுப்பிய கவிதை.
தேடினால் தருவது
கூகுள் இணையம்,
தேடாமல் தருவது
ஆசிரியர் இதயம்.
அந்த இதயத்தின்
புனிதத்தை வணங்கும் தினம்,
செப்டம்பர் ஐந்து
ஆசிரியர் தினம்.
நம்மை ஏற்றிவிட்ட
ஏணிக்களின் தினம்.
நமக்காக உழைக்கிற
தேனீக்களின் தினம்.

மாணவர்களை உருவாக்கும்
பிரம்மாக்களின் தினம்,
பிரம்மாக்களை வணங்கும்
மாணவர்களின் தினம்.

அகரம் சொல்லித்தந்து
சிகரம் ஏற்றியவர்களின் தினம்,
சிகரம் ஏறியவர்கள்
சிறந்து போற்றும் தினம்.
சமுதாயத்தை சீரமைக்கும்
சிற்பிகளின் தினம்.
உலகத்தை ‘உரு’வாக்கும்
உளிகளின் தினம்.
சிந்திக்க வைத்து,
சிரிக்க வைத்து,
பாடம் சொல்லி,
அறிவு புகட்டி,
பல்லக்கில் ஏற்றிவிடும்
ஆசிரியர்களின் தினம்
ஆசிரியர் தினம்.
வணங்குவோம் ஆசிரியர்களை,
வாழ்த்துவோம் ஆசிரியர்கள் தினத்தில் !
கோகுலாஷ்டமி : -
நான் ஒன்றாம் வகுப்பு சேர்ந்த போது, எனது தலைமை ஆசிரியராக இருந்தவர் கண்ணன்.

அவருடைய கண்ணன் எனும் பெயருக்கு கிருஷ்ணன் அவதரித்த கோகுலாஷ்டமி தினத்தில் பிறந்தவர் எனும் வரலாறு உண்டு.

05.09.2015 ஆசிரியர் தினம், கண்ணன் ஆசிரியரின் பிறந்த தினமும் தமிழ் முறைப்படி இன்று.

கோகுலாஷ்டமி தினத்தில் பிறந்ததால் வருடா வருடம் மறவாமல் பிறந்தநாள் வாழ்த்து கூறுவேன். இன்று இரட்டிப்பு மகிழ்வு. காலை தொடர்பு கொண்டு ஆசிரியர் தின வாழ்த்துகளும், பிறந்த நாள் வாழ்த்துகளும் கூறினேன். அதற்குள்ளாகவே இன்னும் அழைப்பு வரவில்லை என்று மனைவி கேட்டதாக சொன்னார்கள்.

இன்றைய தினம் எனது வயது முதிர்ந்த ஆசிரியரின் எதிர்பார்ப்பு, என்னை மேலும் இயங்க வைக்கிறது. காலை தொடர்பு கொண்டு பேசிய நொடிகள் எனக்கு பொக்கிஷமானவை - மருத்துவமனை வளாகத்தில் சிகிச்சைக்காக கண்ணன் சார் காத்திருக்கும் சமயம் அது.

ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் கண்ணன் சார்.அவரோடு சேர்த்த எனது ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும்.
த.க.தமிழ் பாரதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக