நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

வேண்டற்க வென்றிடினும் சூதினை.....

வேண்டற்க வென்றிடினும் சூதினை.....

சென்ற ஆண்டு 2014 நடைபெற்ற ஸ்ரீ ராம் சிட்ஸ் நடத்திய மாநில அளவிலான திசையெல்லாம் திருக்குறள் பேச்சு போட்டியில் கலந்து கொண்ட போது,

இதே போட்டியில் ஆறாம் வகுப்பில் முதன் முறையாக திருவாரூரில் இருந்து திருச்சி சென்று கலந்து கொண்டு முதல் சுற்றில் தோற்று பின் கல்லூரி இரண்டாமாண்டில்மாநில இறுதிப் போட்டி வரை சென்றது எனது (தாமதமான) வளர்ச்சியின் அடையாளமாக கருதுகிறேன்.

இந்தப் மாநில அளவிலான போட்டி நிகழ்ந்த அன்று (27.09.2014) தான் மாநில முதலைமைச்சர் மக்கள் முதல்வராக பதவியேற்றார். சென்னை முழுவதும் அமைதிச் சூழலே நிலவவில்லை. போட்டி நடந்து முடிந்த, இராஜா அண்ணாமலைபுரம் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரி வளாகத்திலே இரவு தங்க நேர்ந்தது. பேருந்தே கிடைக்காமல், அடுத்த நாள் (28.09.2014) ஊர் வந்து சேர்ந்தது என திகில் நிறைந்த நாட்கள் அவை.

பத்து மண்டலங்களில் முதன்மை பெற்றவர்களுக்கிடையே நடைபெற்ற இந்நிகழ்வில் பரிசு கிடைக்காமையே பெரும்பரிசாக அமைந்தது.

இந்நிகழ்வு தொடர்ந்து மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினாலும் நான் பார்க்கவில்லை. கிராமங்களில் வசிக்கும் இருவர் மட்டும் தொலைக்காட்சியில் பேசியதைப் பார்த்ததாக மகிழ்ந்தனர்.

அதைத் தாண்டி நான் பங்கு கொண்ட தொலைக்காட்சி நிகழ்வை எப்படியும் பார்க்க வேண்டும், என்ற ஆர்வத்தில் தொடர்ந்து முயற்சி செய்து வந்தேன். அந்த முயற்சிக்கு பலனாக ஒரு வருடம் கழித்து இப்போது நான் பேசிய ஒளிப்பேழை கிடைத்திருக்கிறது. நாள் பல ஆனாலும் பத்திராமாக கிடைத்திருப்பது மகிழ்வுக்குரியது.

இந்த வருடம் நடைபெற்ற போட்டியின் போது ஒளிப்பேழை கொடுத்தார் ஸ்ரீ ராம் சிட்ஸ் நிறுவனத்தின் நாகராஜன் அவர்கள். பொறுப்புணர்ச்சி மிக்க அந்த அண்ணன் திருவாரூர் வந்த போது மறவாமல் என்னிடம் கொடுத்ததை வியந்து போற்றுகிறேன்.

நன்றி

2 கருத்துகள்:

  1. மாநில முதலைமைச்சர் மக்கள் முதல்வராக பதவியேற்றார்//
    😁😁😁

    பதிலளிநீக்கு
  2. மாநில முதலைமைச்சர் மக்கள் முதல்வராக பதவியேற்றார்//
    😁😁😁

    பதிலளிநீக்கு